Show all

காவல்துறையினர் நடத்திய தீர்த்துக்கட்டுதலில் 24 தீவிரவாதிகள் பலி

ஆந்திரா மாநில எல்லையில் தடை செய்யப்பட்ட மாவோயியத் தீவிரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்த 24 தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒடிசாவின் மால்கன் கிரி மாவட்டத்தில் நடந்த இரு மாநில காவல்துறையினர் நடத்திய கூட்டு தீர்த்துக்கட்டுதலில் இந்தத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மிக அதிக அளவிலான உயிரிழப்பு தற்போதைய தீர்த்துக்கட்டுதலில் மாவோயிய தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தீர்த்துக்கட்டுதலில் 13 மாவோயியத் தீவிரவாதிகள் அதிகபட்சமாக கொல்லப்பட்டிருந்தனர். ஒடிசா மாநிலம், ஆந்திராவின் எல்லையோரத்தின் மால்கன்கிரி மாவட்டத்துக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) ஒடிசா - ஆந்திரா காவல்துறையினர் மாவோயியத் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இந்தக் கூட்டு தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் அதிக அளவில் கொல்லப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாவோயியத்தினர்களுக்கும், காவல்துறையினர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. காவல்துறையினரைக் கண்டதும் காட்டு பகுதிக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுடத்துவங்கினர். காவல்துறையினரும் அதிரடியாக செயல்பட்டு தீவிரவாதிகளை நோக்கி திருப்பி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 24 மவோயியத்தினர்கள் ரத்தவௌ;ளத்தில் பலியாயினர். தீர்த்துக்கட்டுதல் ஒன்றில் அதிக அளவிலான தீவிரவாதிகள் பலியாவது இதுவே முதல்முறையாகும். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மீதான தீர்த்துக்கட்டுதல் நடந்த இடம் ஆந்திராவை நோக்கி செல்லும் சாலை பகுதியாகும். இந்தத் தீர்த்துக்கட்டுதலில் இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் 17 ஆண் தீவிரவாதிகளும், ஏழு பெண் தீவிரவாதிகளும் பலியாயினர். மாவோயியத் தீவிரவாதிகள் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையினர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு இரு மாநில காவல்துறையினர் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்தினர். தீர்த்துக்கட்டுதல் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கிகள், 3 எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள் மற்றும் இதர வகை துப்பாக்கிகளைக் காவல்துறையினர் கைப்பற்றினர். தீவிரவாதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தாக்குதல் நடந்த இடம் பெஜ்ஜிங் என்ற காட்டுப்பகுதியாகும். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் ஒடிசாவின் சித்ர கொண்டாவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மாவோயியத்தினர்களுடனான சண்டையில் காவல்துறையினர் இருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் அவர்களின் உயருக்கு ஆபத்து ஏதும் இல்லை. மாவோயிய இயக்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட 2-வது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.