வங்கிகளில் கடந்த
2016ம் ஆண்டில் 17,750 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளதாம். இதில் பண மதிப்பின் அடிப்படையில்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும், மோசடிப் புகார்களின் அடிப்படையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியும்
முதலிடம் பிடித்துள்ளன. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான
ஒன்பது மாதங்களில், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், 17,750 கோடி ரூபாய் அளவிற்கு
மோசடி நடைபெற்றுள்ளதாம். இது, தொடர்பாக, 3,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன;
அதில், வங்கி ஊழியர்கள், 450 பேரும் அடங்குவர். மோசடியில், பண மதிப்பின் அடிப்படையில், இந்தியா
ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை, முதல் மூன்று இடங்களில்
உள்ளன. இந்த வங்கிகளில், முறையே, 2,237 கோடி ரூபாய்,
2,250 கோடி ரூபாய் மற்றும், 1,998 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாம். அதிகமான மோசடிப் புகார்களில் சிக்கிய வங்கிகளின்
பட்டியலில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி (455 மோசடி புகார்கள்), இந்தியா ஸ்டேட் வங்கி,
(429 மோசடி புகார்கள்), ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (455 மோசடி புகார்கள்) ஆகியவை
முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. அடுத்த இடங்களில், எச்.டி.எப்.சிவங்கி, ஆக்சிஸ்
வங்கி, பரோடா வங்கி, சிட்டி வங்கி ஆகியவை உள்ளனவாம். மதிப்பீட்டு காலத்தில், இந்தியா ஸ்டேட் வங்கியைச்
சேர்ந்த, 64 ஊழியர்கள் மீது, பண மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.