மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி திங்கள்கிழமை வீடு திரும்பினார். தைராய்டு பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கனிமொழி அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு திங்கள்கிழமை அவர் திரும்பினார். இன்னும் ஓரிரு நாள்கள் அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.