தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை பெருகி வருவதால் சாலை விபத்துகள் என்பது அன்றாட செய்தியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். வளரும் தலைமுறையினரும், பெண்களும் கூட மதுவுக்கு அடிமையாகி வருவதாக செய்திகள் வெளியாகி வருவதை அவர் சுட்டிகாட்டி உள்ளார்.
மதுக்கடையினால் வரும் வருவாயை மட்டுமே நம்பி இருக்கின்ற தமிழக அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தமிழகத்தில் சாலை விபத்துகளுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கேட்டு கொண்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.