Show all

காஷ்மீரில் மழையின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி

காஷ்மீரின் பால்டால், பஹல்காம் பகுதிகள் வழியாக அமர்நாத் யாத்ரிகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கடந்த சில தினங்களாக அந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்ரீநகர்-லே சாலையில் உள்ள குல்லான் பகுதியில் 2 சிறுவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். கன்டர்பால் மாவட்டம் குல்லான் கிராமத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் சிந்து ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் கனமழைக்கு பலியாகினர். பஹல்காம் அடுத்த பஞ்சதாரணி பகுதியை சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்கி பலியானார். காஷ்மீரில் பெய்த கனமழைக்கு இதுவரை 6 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.