Show all

அல்லாடும் பிக்பாஸ்! ஐசுவர்யாவுக்கு வெற்றியாளர் வாய்ப்பு வழங்கவும் வேண்டும்; அது மக்கள் தீர்ப்புதாம் என்று நிறுவவும் வேண்டும்

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போட்டியாளர்களின் வாக்கு விபரத்தை வெளிப்படையாக அவ்வப்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வருவதுகூட, ஐஸ்வர்யாவை வெற்றியாளராக்க மேற்கொள்ளும் பிக் பாஸின் தந்திரயுக்தி தான் எனக் கூறப்படுகிறது. தந்திரயுக்தியின் தலைவியான ஐஸ்வர்யாவை பிக்பாசுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இம்முறை 105 நாட்களாக நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டிருப்பதால், கடைசி கிழமையில் சுமைவேலை என்ற பெயரில் போட்டியாளர்களை இம்சிக்காமல் மலரும் நினைவுகளாக ஓட்டி வருகிறார் பிக் பாஸ்.

இது ஒருபுறம் இருக்க, மக்கள் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பதால், ஒவ்வொரு போட்டியாளருக்கும் கிடைத்து வரும் வாக்குவிபரம் அவ்வப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இறுதி சுற்றுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வரும் வாக்கு விபர அடிப்படையில் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் ரித்விகா முதலிடத்தில் உள்ளார். கடந்த மூன்று வாரங்களாக கிழமைகளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐசுவர்யா இரண்டாம் இடத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் உள்ளார்.

ஆனால், இம்முறை இப்படி பிக் பாஸ் வெளிப்படையாக வாக்குவிபரத்தைக் கூறுவதிலும் ஒரு தந்திரயுக்தி இருக்கிறது. அதாவது கொஞ்சம் கொஞ்சமாக முதலிடத்தில் இருக்கும் ரித்விகாவின் வாக்குகளுக்கு, ஐசுவர்யாவை முன்னேற்றி, கடைசி நேரத்தில் அவரை வெற்றியாளராக அறிவிக்கத்தாம் மக்களை இப்படி அவர் தயார் செய்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியபோதும், தொடர்ந்து பிக் பாஸுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராகத் தான் வலம் வருகிறார் ஐசுவர்யா. தொடக்கத்தில் இருந்தே அவர் தான் பிக் பாஸ் பட்டத்தை தட்டிச் செல்வார் என வீட்டிற்குள் இருப்பவர்களும், வெளியில் உள்ள சில பிரபலங்களும் கூறி வருகின்றனர்.

அதனை ஆம் என நிரூபிப்பது போல, ஐசுவர்யாவை வெளியேற்ற வலுவான காரணங்கள் இருந்தபோதும், அதனைச் சிறியதாக்கி அவரைக் காப்பாற்றி வருகிறார் பிக் பாஸ். அந்த அடிப்படையில் பார்த்தால், மக்களிடம் தற்போது அமோக ஆதரவு பெற்றிருக்கும் ரித்விகாவையும், புது விதமான தந்திரயுக்தியைப் பயன்படுத்தி பின்னுக்கு தள்ளி விட பார்க்கிறார் பிக் பாஸ் என்றே தோன்றுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக ஐசுவர்யாவின் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, பின்னர் ரித்விகாவின் வாக்குகளுக்கு இணையாக கொண்டு வந்து, கடைசி நேரத்தில் ரித்விகாவைப் பின்னுக்குத் தள்ளி ஐசுவர்யா வெற்றியாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாசின் முடிவுகளுக்கு ஏற்ப, கமல் பிக்பாஸ் எழுதிக் கொடுத்த வசனத்தை அப்படியே ஒப்பிக்காமல், சில பல இடைச் செறுகல்களைச் சேர்த்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை ஒப்பேற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,923.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.