Show all

தீயாய் பரவிவரும் காணொளி! ஈசா சிவராத்திரி பூசையில் நடனமாடிய தமன்னா

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடி வருகிறது ஈசா. அதில் கலந்து கொள்கிற ஒவ்வொருவரும், உணர்ச்சி பெருக்கில் நடனமாடுவார்கள். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக நடிகை தமன்னாவும் பூசையில் கலந்து கொண்டார்.

அண்மையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இவ்வாறு கூறினார், ‘இது எனக்கு மறக்க முடியாத சிவராத்திரி. ஒவ்வொரு நொடியிலும் ஆனந்தமாக உணர்ந்தேன். சத்குருவுடன் இந்த ஆண்டு மகாசிவாராத்திரியைக் கொண்டாடியதில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். சத்குருவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்று பகிர்ந்துள்ளார் தமன்னா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,700

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.