Show all

கடவுள் கொடுத்த வரமாமே என்னது! சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட கீச்சுப் பதிவில் காண்க

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவருடன் மகன் விளையாடும் புகைப்படத்தைத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

ரஜினி மகள் சௌந்தர்யா விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு தனது புதுமண வாழ்வை மீண்டும் தொடங்கினார். தற்போது இந்த இணையர் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி உள்ள நிலையில் சௌந்தர்யா தனது கீச்சுப் பக்கத்தில்  புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

அதில் சௌந்தர்யாவின் கணவர் விசாகன், சௌந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறார். அதனை புகைப்படமெடுத்து பதிவு செய்துள்ள சௌந்தர்யா, 'இதுதான் கடவுளின் ஆசிர்வாதம், வரம் என்றும் இவர்கள் இருவரும் எனது உயிர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.