Show all

தற்கொலைக்கு முயல்வது தொடர் வாடிக்கையாம்! மைக்கேல் ஜாக்சன் மகள் குறித்து இணையத்தில் தீப்பரவல்

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகமே வியந்து அண்ணாந்து பார்த்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன், பிரின்ஸ் ஜாக்சன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் லீவிங் நெவெர்லாண்ட் ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. 

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஆவணப்படத்திற்கு மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மைக்கேல் ஜாக்சன் மகளும் பிரபல மாடல் அழகியுமான பாரிஸ் ஜாக்சன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில், கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாவும்  பிறகு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றதாகவும்  காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. 

இது பாரிஸ் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தற்போது பாரிஸ் ஜாக்சன் சமூக வலைத்தளத்தில் இது பொய்யான தகவல் என்று என்று கீச்சு பதிவிட்டுள்ளார். 

ஆனாலும் இதற்கு முன்பும் பாரிஸ் ஜாக்சன் சிலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்றும், தற்கொலை முயற்சிக்கு முயல்வது அவருக்கு வாடிக்கையென்றும் செய்தி பரவி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.