Show all

தற்போது பகைவியாக அதிரடி காட்ட வருகிறார்! கதைத்தலைவியாக கலக்கி வந்த தமன்னா

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் முன்னணி கதைத்தலைவியாக இருக்கும் தமன்னா, அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் பகைவியாக நடிக்க இருக்கிறார். கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னணி கதைத்தலைவிகள் சிலர் தங்கள் வேடங்களை முதன்மைப் படுத்தும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தமன்னா தற்போது தெலுங்கில் தட் இஸ் மகாலட்சுமி, தமிழில் தேவி 2 என இரு படங்களில் தன்னை முதன்மைப் படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதே என் விருப்பமாக உள்ளது. இத்தகைய படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

விசாலுடன் இணைந்து கத்திச் சண்டை படத்தில் நடித்த அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து நடித்து வருகிறார். இதில் பகைவி கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அறைகூவலான கதாபாத்திரத்தில் அதில் நடிக்க உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வலுப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.

தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான எப் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அவர் ஓம்கர் இயக்கத்தில் ராஜு கரி காதி 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.