Show all

தம்மை உண்மையானவராக காட்ட முயலும் பிக்பாஸ் நடவடிக்கையில் உற்சாகத்தை காணோமே

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில், சினேகனை விட எதிர்மறைத் தன்;மையுள்ள ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது பிக்பாஸ். இந்த முறையும் எதிர்மறையாளரை வெற்றியாளாராக அறிவிக்கும் உற்சாகத்தில் வாக்கெடுப்பில் தில்லுமுல்லு செய்து சென்றாயனை வெளியில் அனுப்பி விட்டு அதிரடி ஐசுவர்யாவைக் காப்பாற்றியது. இதில் கமலும் உற்சாகமடையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சயைக் காண வந்த பார்வையாளர்களும் உற்சாகமடைய வில்லை. நிகழ்ச்சியின் தொலைக்காட்சி பார்வையாளர்களும் உற்சாகமடைய வில்லை. 

இதை புரிந்து கொண்ட பிக்பாஸ் தன்னை உண்மையாளராக காட்டும் முயற்சியில் வாக்கெடுப்பில் வெளிப்படைத் தன்மையை காட்டி வருகிறார். தமிழக மக்கள் நேர்மறையாளரை விரும்பும் இயல்புடையவர்கள். எதிர்மறைக்கான வெற்றியை இரசிக்க மாட்டார்கள். என்பதை பிக்பாஸ் புரிந்து கொண்டால் சரி.

பிக்பாஸ் இறுதி போட்டிக்கு ரித்விகா, ஐசுவர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தகுதி பெற்றிருந்தாலும் சற்றுமுன் வரை வெளியான வாக்குப்பதிவின் தகவலின்படி ரித்விகாவிற்கு 24 லட்சத்து 71 ஆயிரத்து 705 வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்தபடியாக உள்ள ஐஸ்வர்யாவுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 810 வாக்குகள் கிடைத்துள்ளன. விஜயலட்சுமிக்கு சுமார் 7.5 லட்சம் வாக்குகளும், ஜனனிக்கு சுமார் 6 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன.எனவே தற்போதைய நிலையின்படி ரித்விகாவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. ஜனனி கிட்டத்தட்ட போட்டியை விட்டு வெளியேறிவிட்டதாகவே தெரிகிறது. விஜயலட்சுமியும் இனிவரும் நாட்களில் பெரும் வாக்கு வித்தியாசத்தை வெற்றி கொள்வது சிரமம்தான்

எனவே தற்போது விஜயலட்சுமி, ஜனனி ஆதரவாளர்களும் வெல்லும் வாய்ப்பு இருக்கும் ரித்விகாவிற்கு வாக்குகள் பதிவு செய்ய முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. எனவே இதே ரீதியில் நியாயமாக வாக்குப்பதிவு நடந்தால் ரித்விகா 'பிக்பாஸ் 2' தலைப்பை வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. என்ன பிக்பாஸ்? நடவடிக்கையில் உற்சாகத்தையே காணோமே?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.