Show all

நேற்று இளையராசா, இன்று பாக்கியராசா! பாஜகவினர் எழுதித்தரும் அறிக்கையைப் படித்து வம்பில் மாட்டிக்கொண்டவர்கள்

ஒன்றியத்தை ஆளும் கட்சியினர் நம்மை அழைக்கின்றார்களே என்ற பெருமிதத்தில் வம்பில் மாட்டி வருகின்றனர் தமிழ்ப்பேரறிமுகங்கள். 

08,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றியத்தை ஆளும் கட்சியினர் நம்மை அழைக்கின்றார்களே என்ற பெருமிதத்தில் வம்பில் மாட்டி வருகின்றனர் தமிழ்ப்பேரறிமுகங்கள். 

நேற்று வம்பில் மாட்டி, உலகளாவிய தலைப்பில் சின்னாபின்னமாக்கப்பட்டவர், ஹிந்தித் திரைஇசையை, அதன் கனவிலும் அச்சுறுத்தி வந்த வேங்கையாக விளங்கிய இளையராசா.

இன்று தலைப்பாகி இருப்பவர் தமிழ்த்திரையின் பேரறிமுக இயக்குநர் பாக்கிய ராசா அவர்கள். சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, பாஜகவினர் எழுதிக் கொடுத்த கன்னா பின்னா மன்னா தென்னா அறிக்கையை வாசித்து வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் பாக்கியராசா.


அவரின் பேச்ச தீயான ஒரு மணி நேரத்தில் கே.பாக்யராஜ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு காணொளி வெளியிட்டிருந்தார். அதில்  கூறியிருப்பதாவது: நான் பாஜவை சேர்ந்தவன் அல்ல. தமிழில் படித்து வளர்ந்தவன். தமிழ்தான் இந்த இடத்தில் என்னை உட்கார வைத்திருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட இயக்க கருத்துகளை கேட்டு வளர்ந்தவன். என் படங்கள் மூலமாகவும் திராவிட கருத்துகளை வலியுறுத்தி வந்திருக்கிறேன். இனியும் திராவிட இயக்க கருத்துக்களுடன்தான் என் பயணம் தொடரும்.

இனியேனும் பாஜக அழைப்பை- ஒன்றியத்தை ஆளும் கட்சியின் பெருமிதமாகக் கருதிவிட வேண்டாம் தமிழ்ப்பேரறிமுகங்களே! கட்டாயமாக அவர்களின் அறிக்கை வாசிப்பு வேண்டவே வேண்டாம், தமிழ்ப்பேரறிமுகங்களே! அவர்கள் தரும் உறையை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த உறைக்குள் இருப்பது தமிழ்மக்களின் உழைப்பேதான். ஆனால் உறைக்குள் வைத்துத் தரும் அவர்களின் கன்னா பின்னா அறிக்கையை குப்பைத் தொட்டிக்கு கொடுத்து விடுங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,225. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.