Show all

நிழல் வாக்கெடுப்பு தெரிவிக்கும் தகவல்! பிக்பாஸ் வீட்டில் நாளை வெளியேறப் போகிறவர் ஐசுவர்யா

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாளை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறவர் ஐசுவர்யாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் வாக்கெடுப்புகளோடு சில நிழல் வாக்கெடுப்புகளும் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவைகளில், பிக்பாஸ் வாக்கெடுப்பு போல கமுக்க வாக்கெடுப்பாக இல்லாமல், நமது வாக்கு பதிவான உடனேயே பொதுவாக களத்தில் உள்ளவர்கள் அனைவரின் வாக்குகள் விவரம் தெரிவிக்கப் பட்டு விடும்.

இந்த வகையாகத்தான் கடந்த கிழமை சென்றாயன் வெளியேற்றத்தில், பிக்பாஸ் வாக்கெடுப்பில் ஏதோ கதையாகி விட்டது என்று கருத இடமானது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறவர் ஐசுவர்யாவாக இருக்கலாம் என்று நிழல் வாக்கெடுப்பு தெரிவிக்கிறது. 

பிக்பாஸ் வீட்டிலிருந்து அனேகமாக வெளியேற அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்தும் ஐசுவர்யா பெயர்தான் அடிபடுகிறது. ஆனாலும் மக்கள் எதிர்பார்க்காத விதமாக சில நேரத்தில் பிக்பாஸ் ஏதாவது கதை பண்ணுவார். இந்த முறையும் அப்படி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,911.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.