Show all

தினகரனின் ‘மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம்’ அதிர்ச்சியில் எடப்பாடி-பன்னீர் கூட்டணி

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தினகரன் வருகிற 20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல் (02.02.2018) தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அன்று ‘மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் என்ற பெயரில் முதற்கட்டமாக முதல் திருவிடைமருதூரில் தினகரன் தனது பயணத்தை தொடங்குகிறார். மறுநாள் குடந்தை தொகுதியிலும், ஞாயிறன்று பாபநாசம், திங்கள் கிழமை திருவையாறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

இந்த புரட்சிகரமான சுற்றுப்பயணத்தில் அனைத்து தரப்பிலான மக்களும் கலந்துகொள்ளும் படி தினகரன் அணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினகரனை இரா.கி.நகர் மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி-பன்னீர் கூட்டணி மற்றும் இரா.கி.நகரில் தோல்வியுற்ற கட்சிகள் கருத்துப் பரப்புதல் செய்து வந்த நிலையில் தினகரனின் இந்த அதிரடி அவர்களுக்கு தினகரன் தரும் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் என்று பேசிக் கொள்கிறார்கள் தமிழகமக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,683

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.