Show all

தம்பியை கதைத்தலைவனாக்கிய ரகுல் ப்ரித்திசிங்!

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் 'தேவ்' ஆகிய படங்களில் கதைத்தலைவியாக நடித்த நடிகை ரகுல் ப்ரித்திசிங் தற்போது சூர்யாவுடன் 'என்.ஜி.கே', சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் என தெலுங்கை போலவே தமிழிலும் வேலையாக உள்ளார். இந்த நிலையில் ரகுல் ப்ரித்திசிங்கின் தம்பி தற்போது ஒரு படத்தின் கதைத்தலைவனாகியுள்ளார்.

ரகுல் ப்ரித்திசிங் தம்பி அமன் ஏற்கனவே ஒரு வடக்கத்திய திரைப்படத்தில் முதன்மை  கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளிவராத நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் அமன் தற்போது கதைத்தலைவனாகியுள்ளார். இன்னும் இந்தப் படத்திற்கு தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

தாசரி லாரன்ஸ் இயக்கவுள்ள இந்த படத்தின் கதைத்தலைவியாக மோனிகா சர்மா என்ற புதுமுகம் நடிக்கவுள்ளார். அமன்-மோனிஷா காதல் குறும்புக் காட்சிகள் தான் இந்த படத்தின் வெளிச்சம் என்று கருதுகிறார்கள் படக்குழுவினர். (வெளிச்சமா, இருட்டா படம் வெளியானதும் மக்கள் உறுதி செய்வார்கள்).

இந்தப் படத்தை ரஜினி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் தம்பிக்காக ரகுல் ப்ரித்திசிங் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,074.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.