Show all

துப்பறிவாளன் படம் வெளியிடுவதில் சிக்கல்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளின் விநியோக உரிமை தர்மபுரியை சேர்ந்த டி.என்.சி. சினி ஸ்கிரின்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

பின்னர் இந்தப் படத்தின் முழுமையான விநியோக உரிமையை நடிகர் விஷாலின், விஷால் பிலிம் பேக்ட்ரி பெற்றுள்ள நிலையில், தாங்கள் கொடுத்த 55 லட்ச ரூபாயை திருப்பி தரக்கோரி டி.என்.சி நிறுவனம் கேட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து படத்தை வெளியிட தடைகோரி டி.என்.சி. சார்பில் சென்னை 5 வது உதவி உரிமையியல் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.என்.சி. நிறுவனத்துக்கு உடனடியாக 25 லட்ச ரூபாயை தரத் தயாராக இருப்பதாகவும், 18 திரையரங்குகளில் மட்டும் வெளியிடும் உரிமையை தருவதாகவும் விஷால் பட நிறுவனம் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, உத்தரவாதம் அளித்தபடி பணம் கொடுக்கப்படாவிட்டால், படத்தை இன்று வெளியிடக்கூடாது என தெரிவித்த அறங்கூற்றுவர் வழக்கை வருகிற 19க்கு ஒத்திவைத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.