30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த கட்சியும் உடைந்து போவதை, பாஜக விரும்பாது. திமுக, அதிமுக இடையே இரண்டு தலைமுறைகளாக உள்ள பரஸ்பர பகைதான், அவர்களுக்கு பலம். தமிழகத்தில் உள்ள எந்த கட்சியையும் நாங்கள் ஆட்டி படைக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அந்த அச்சம் உள்ளது. நாங்கள் கூட்டணி வியூகம் அமைத்து வருகிறோம். அதைப் பற்றி தெரியாததால், நாங்கள் கட்சிகளை ஆட்டிப்படைக்கிறோம் என்கின்றனர். தமிழகத்தில் பாஜக கால் ஊன்றி நிற்கும் என்று தெரிவித்தார் நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ஆம் அவர்கள் அப்பன் குதிருக்குள் இல்லையாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.