Show all

விஞ்ஞானியாக மாதவன் நடிக்கும், கதைத்தலைவி இல்லாத படம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது மாதவன் விஞ்ஞானியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். அது கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது, இஸ்ரோவில்; விஞ்ஞானியாக பணி புரிந்தவர் இவர், இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் ஒரு உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். 

இவர் மீதான வழக்கு நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரித்தது. மாற்றப்பட்டது. இறுதித் தீர்ப்பின் போது இவர் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்தது. 

தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் ஒரு புத்தகமாகவும்  எழுதியுள்ளார். பின்னாளில் இந்த சர்ச்சைக்குரிய கதையை படமாக்க இயக்குநர் ஆனந்த் மகாதேவன் விருப்பம் தெரிவித்தார், அதற்கு நம்பியும் ஒப்புக் கொள்ள- தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். 

இந்நிலையில் திடீரென்று அண்மைக் காலமாக தனக்கு அதிக வாழ்த்துச் சேதிகள் வருவதாகவும், இதனால் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறிய மாதவன், இந்த படத்தில் கதைத்தலைவி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.