01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கு தமிழில் முன்னணி கதைத்தலைவியாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் கார்த்தியுடன் தீரன் படத்தில் நடித்திருந்தார். அதுபோல அவரின் தேவ் படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. மேலும் 25க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், ஒரு சமயம் லண்டனுக்கு தோழிகளுடன் சென்றேன். அங்கு நண்பர்களுடன் உணவருந்த சென்றேன். அந்த உணவகத்திற்கு மதிப்பீடு அதிகமாக இருந்ததால் அங்கு சென்றோம். சாப்பிட்டு முடித்த பின் 10 லட்சம் கட்டணம் என கூறினார்கள். இதனால் நான் அதிர்ந்து போனேன். கட்டணத்தைச் செலுத்தி விட்டு பேசாமல் அங்கிருந்து வந்துவிட்டேன். அப்பப்பா! வெளிநாடுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று தோழிகள், உறவு வட்டங்களில் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஏமாந்து போய் இப்படி குமிழ் வாங்குவேன் என்று கனவில் கூட நினைக்க வில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,062.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.