Show all

தேவலாமே! சாய்பல்லவி பெயரோடு பட்டத்தைச் சேர்த்துக் கொள்வதில்லை; மருத்துவப் பட்டப் படிப்பு முடித்தவராம்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சினிமாவில் நடித்து கொண்டே டாக்டர் வேலை பார்ப்பதில் உடன்பாடு இல்லை அதனால் எம்.பி.பி.எஸ் பட்டத்தை என் பெயரின் பின் சேர்த்து கொள்ளவில்லை என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

பிரேமம்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி, அந்த ஒரு படத்திலேயே மலர் டீச்சராக எல்லோர் மனதிலும்இடம்பிடித்து விட்டார். அவர் தெலுங்கில் அறிமுகமான 'பிடா' படமும் வெற்றிப் படமே. தற்போது தமிழில் விஜய் இயக்கம் 'கரு' படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அத்துடன், தனுஷ் ஜோடியாக 'மாரி 2' படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்திலும் நடிக்கிறார்.

இந்த திரைப்பயணம் குறித்து அவர் அளித்த பேட்டியில், கங்கன ரனாவத்திற்கு தோழியாக தாம்தூம் படத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு என் தந்தை திரையுலகம் நிரந்தர தொழில் இல்லை. கதாநாயகிகள் ஐந்தாறு ஆண்டுகள் மட்டுமே நிலைத்து இருக்க முடியும் என்று கூறி மருத்துவம் படிப்பதற்காக ஜார்ஜியாவுக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது நான் படித்து கொண்டிருக்கும் போது பிரேமம் படம் வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் நடித்தேன், அது மிக பெரிய வெற்றியை எனக்கு தந்தது. அதனால் நான் முழுநேர கதாநாயகி ஆகிவிட்டேன். திரைப்படத்தில் நடித்து கொண்டே மருத்துவராக வேலை பார்பதில் எனக்கு உடன்பாடு  இல்லை அதனால் என் பெயரின் பின் எம்.பி.பி.எஸ் பட்டத்தை சேர்த்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

யாரது அங்கே! ஏதோ நையாண்டி போலத் தெரிகிறதே! ஆம்; தமிழிசை அரசியலில் சொதப்பு சொதப்பு என்று சொதப்புகிறார்;அதனால் அவர் மருத்துவர் பட்டத்தை துணிச்சலாக துறந்து விட முடியாதுதான். 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. ,ன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,738.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.