இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர், இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டியில் பங்கேற்க உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ரோமோஷன் வேலைகளை தற்போது வேகமாக செய்து வருகிறது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் தமிழில் ட்விட் செய்து கலக்கி வருகின்றனர். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சளரும் CSK வீரருமான ஹர்பஜன் சிங் சில நாட்களாகவே தமிழில் ஏராளமான ட்விட் செய்து கலக்கி வந்தார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு ஆவதற்கு முன்பே நிறைய முறை தமிழில் ட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இம்ரான் தாஹிர் தமிழில் ட்விட் செய்து கலக்கியுள்ளார். இவர் அந்த ட்விட்டில் 'என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். சிங்கார சென்னைக்கு நாளை வந்துவிடுவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வரோம், தட்றோம், தூக்கறோம். எடுடா வண்டிய, போடுடா விசில, என்னுடைய தமிழ் ஆசிரியர் மற்றும் சகோதரர் ப்ரசன்னாவிற்கு நன்றி' என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இவர் இதற்கு முன்பே என்னுடைய தமிழ் ஆசிரியரை அறிமுகம் செய்கிறேன் என பிரசன்னாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.