06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் மீதமிருக்கும் 6 பேரில் இந்தக் கிழமை இருவர் வெளியேற உள்ளதாக நிகழ்ச்சிக்குழு அறிவித்தது. வீட்டிலிருக்கும் அறுவரில் ஜனனி இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார். ஜனனி தவிர, மீதமிருக்கும் யாஷிகா ஆனந்த், பாலாஜி, ஐசுவர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 5 பேர் இந்தக் கிழமைக்கான வெளியேற்றப் பட்டியலில் இருந்தனர். இவர்களில் யாரை வெளியில் அனுப்பவது என்பதை மக்களின் வாக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்மானிக்கப் படுகிறது. அதன்படி இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் நடிகர் பாலாஜி என்று தகவல் கசிந்திருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,918.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.