Show all

அடுத்த மாத இறுதியில் வெளியாகிறது செக்கச்சிவந்த வானம்!

25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய திரைத்துறை பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் செர்பியாவில் நிறைவடைந்தது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படம் அடுத்த மாத இறுதியில் வெளியாகும்  என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நவாப் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,875.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.