Show all

காவல்துறைக்கு கண்டனம்; திருமுருகன் காந்தியை சிறைபடுத்த எந்த முகாந்திரமும் இல்லை! சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்றம் அதிரடி

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரை தேச துரோக வழக்கில் கீழ் கைது செய்தனர். அரசுக்கு எதிராக பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது என்று வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

ஐரோப்பாவில், திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசினார். நடுவண் மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கி சூடு என்று 200க்கும் அதிகமான உலக நாட்டு பிரதிநிதிகள் முன் பேசினார். அந்த பேச்சு பலரை ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச வைத்துள்ளது. இதனால் அவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

இன்று அவர் தமிழக காவல்துறையால் பெங்களூரில் இருந்து பொறுப்பில் எடுக்கப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, தமிழக காவல்துறையால் சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்றத்தில் அணியப் படுத்தப்பட்டார். தேசவிரோத வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி தற்போது திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் பிரகாஷ் இந்த வழக்கில் தமிழக போலீசுக்கு காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன்? அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள். பிரிவினை பேச்சு காணொளியை ஏன் 64 நாட்களாகியும் பதிகை செய்யவில்லை, என்று சாரமாரியாக் அறங்கூற்றுவர் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறை அவரைச் சிறையில் அடைக்க அனுமதி கோரி இருந்தது. ஆனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது என்று அறங்கூற்றுவர் பிரகாஷ் மறுத்து விட்டார். அதேபோல் காவல்துறை காவலில் அனுப்பவும அறங்கூற்றுவர் பிரகாஷ் மறுத்து விட்டார். தேவையானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்கலாம் என்று கூறி விட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,875.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.