Show all

கருணாநிதி அவர்களோடான மலரும் நினைவையும் இரங்கலையும் தமிழில் கீச்சு பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: கருணாநிதிக்காக தமிழில் இரங்கல் தெரிவித்து கீச்சு பதிவிட்டுள்ளார் வடஇந்திய நடிகர் அமிதாப் பச்சன்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பலர் கீச்சு மற்றும் முகநூலில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வடஇந்திய நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் கீச்சு பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கீச்சுவில் கூறியிருப்பதாவது,

மரியாதைக்குரிய திருவாளர் கருணாநிதி அவர்களுக்கு பிரார்த்தனை மற்றும் இரங்கல்.

சாத் இந்துஸ்தானி படத்திற்காக நான் முதன்முதலாக தேசிய விருதை அவர் கையால் தான் வாங்கினேன். தேசிய விருது விழா சென்னையில் நடந்தபோது அவர் தான் முதல்வராக இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,873.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.