Show all

மகப்பேற்றுக்கு ஓய்வு எடுக்கிறார் ஆல்யா மானசா! அவருக்கு மாற்றாக விஜய் தொலைக்காட்சி களமிறக்கியுள்ள புது நடிகை யார்?

விஜய் தொலைக்காட்சியின் பேரறிமுக நடிகை  ஆலிய மானசா இரண்டாவது மகப்பேற்றுக்காக இராஜா ராணி பருவம் இரண்டிலிருந்து தற்காலிகமாக விலகுகிறார். அவர் நடித்து வந்த சந்தியா வேடத்தில் நடிகை ரியா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

02,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய தொடர்களில் ஒன்று தான் இராஜா ராணி. அந்தத் தொடர் மூலம் சின்னத்திரைக்குக் கிடைத்த நடிகை தான் ஆல்யா மானசா. இந்த தொடர் மூலம் அவருக்கு கொண்டாடிகளிடம் நல்ல பேரும் புகழும் கிடைத்தது. கூடவே அவருக்கு காதல் கணவர் சஞ்சீவும் கிடைத்தார். இராஜா ராணி தொடரில் தனக்குக் கதைத்தலைவனாக நடித்து வந்த சஞ்சீவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆல்யா தொலைக்காட்சி தொடரில் நடிப்பதில் தற்காலிக ஓய்வு கொடுத்தார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு ஆண்டு கழித்து மீண்டும் தொடரில் நடிக்க தொடங்கினார் ஆல்யா. அதுவும் இராஜா ராணி இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் வெளியான இராஜா ராணி இரண்;டு தொடர் மூலம் மீண்டும் நுழைந்தார் சின்னத்திரையில். இதில் சந்தியா என்ற வேடத்தில் ஆல்யா நடித்து வந்தார். தொடக்கத்தில் இந்தத் தொடர் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் தற்போது முதன்மை நேரத்தில் இலக்கு அளவீட்டுப் புள்ளியிலும் (டிஆர்பி) கலக்கி கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் சரணவனாக நடிக்கும் சித்து மற்றும் ஆல்யாவின் நடிப்பு கொண்டாடிகளைப் பெருமளவில் கவர்ந்துள்ளது.

சமூகவலைத்தள பக்கங்களில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் ஆல்யா சஞ்சீவ் இணை, தற்போது 'சஞ்ஜீவ் ஆல்யா' என்ற வலையொளி காட்சிமடை நடத்தி வருகின்றனர். இந்த வலையொளியில் வெளியான காணொளி ஒன்றில் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ், தனது மனைவி மீண்டும் கருத்தரித்திருப்பதாக அறிவித்திருந்தார். அதன் பின்பு ஆல்யாவுக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிய தொடங்கின. அதே நேரம், அவர் இராஜா ராணி தொடரில் இருந்து விலகுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. ஆனால் ஆல்யா அதை மறுத்தார். தொடர்ந்து 9 மாதம் நிறைமாத கர்ப்பிணியாகவும் தனது நடிப்பை தொடரில் தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கதில் ஆல்யாவுக்கு குழந்தைப் பேற்றுக்கான நாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டிப்பாக ஓய்வு தேவை என்பதால் ஆல்யா தொடரில் இருந்து விலகியுள்ளார். மூன்று மாதத்துக்கு ஆல்யா நடிக்க மாட்டார் என தெரிகிறது. இந்தத் தகவல் நேற்று வெளியான நிலையில், தற்போது இராஜா ராணி 2 தொடரில் சந்தியாவாக நடிகை ரியா என்பவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,189.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.