Show all

லாஸ்லியாவிற்கு மூன்றாவதாக கிடைத்துள்ள படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேரறிமுகமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்படும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரறிமுகமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான கொண்டாடிகள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் கூடி வருகிறது. 

அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு கதைத்தலைவியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். 

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கொரோனாவை முன்னிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடத்தப்பட்டு  கொண்டு வரும் நிலையில், லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மரகத நாணயம், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். லாஸ்லியாவுக்கு கதைத்தலைவனாக அறிமுக நடிகர் பூரணேஷ் நடிக்க உள்ளார். திகில் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா சரவணன் இயக்க உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.