Show all

பிக்பாஸ் பருவம் நான்கு மிக விரைவில்! அதனாலேயே அரை மணி நேர பாரதிகண்ணம்மா தொடர் அதுவரை ஒரு மணிநேரமாம்

விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நான்காவது பருவத்தில் பேரறிமுக நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நான்காவது பருவத்தில் பேரறிமுக நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் இதுவரை 13 பருவங்கள் முடிந்துள்ளன.

தமிழில் 3 பருவங்கள் முடிந்துள்ளன. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் நான்காவது பருவம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. அண்;மையில் இதன் முன்னோட்டம் வெளியாகி பிக்பாஸ் நான்காவது பருவம் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 
இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வரும் நிலையில் பேரறிமுக நடிகை கிரண் பிக்பாஸ் நான்காவது பருவத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை கிரண், தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் விரைவில் வெளியாக இருப்பதாலேயே பிக்பாஸ் ஒளிபரப்பு நேரமான இரவு ஒன்பது மணிக்கு வேறு ஒரு தொடரை ஒளிபரப்பாமல் பாரதி கண்ணம்மா தொடரையே அரைமணி நேரம் நீட்டித்து ஒளிபரப்பி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒரு மருத்துவர் இப்படி மங்குணியாகவா இருப்பார்? இந்த வீணாய்ப் போன தொடருக்கு ஒரு மணி நேரமா என்று ஒரு சிலர் அங்கலாய்த்தாலும் அதுதான் இலக்கு அளவீட்டுப் புள்ளிகளில் (டிஆர்பி) முதன்மையில் இருக்கிறதாம். 

பாரதி கண்ணம்மா தொடர் மலையாள மொழித் தொடரான கருத்தமுத்து என்ற தொடரின் தமிழ் மறு தயாரிப்பாகும்.

இந்த தொடரில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். ரோஷினி ஹரிப்ரியன் கண்ணமாகவும் மற்றும் நடிகை சுவீட்டி அஞ்சலியாகவும் நடிக்கிறார்.

கண்ணம்மா மற்றும் அஞ்சலி இருவரும் மாற்றாந்தாய் சகோதரிகள். கண்ணம்மா கருத்த நிறம் கொண்டவள். அஞ்சலி வெள்ளை நிறம் கொண்டவள்.

கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற ஒரு மாப்பிள்ளை அமைகிறது. அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது இவர்களின் வாழ்வில் அஞ்சலியால் வரவிருக்கும் சிக்கல்களை  மையமாக வைத்து, நகர்ந்து வந்த கதையில் 

வெண்பா என்ற அழகிய பெயருக்கு உரிய ஒரு அருவருப்பான கதை பாத்திரத்தின் மூலம் மருத்துவர் பாரதி மங்குணி பாரதியாக மாற்றப்படுகிறார். பாரதியாக நடிக்கும் இந்த அருண் பிரசாத் ஒரு ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் வரக்கூடியவர். மௌன ராகம் தொடரில் நடிக்கும் சக்தி குழந்தையும், ஒரு ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு நடிப்பவர் என்கிற நையாண்டிக்கு உரியவர் என்பார்கள் தொடர் கொண்டாடிகள்.

அஞ்சலி அகிலன் இணை நல்ல கலகலப்பு. இன்றைய தொடரில் ஒரு வழியாக மங்குணி பாரதி- கண்ணம்;மா மீது பழிபோட்டு பேசி விட்டார். அடுத்த கிழமையில் மங்குணி பாரதி- மனைவி கண்ணம்மாவிடமும் அவனுடைய தாயிடமும் அடிபடப் போவதாக எதிர்பார்த்த காட்சி அமையப் போகிறது. இந்தத் தொடரின் இலக்கு அளவீட்டுப் புள்ளியை உயர்த்திக் கொண்டிருக்கும் கொண்டாடிகள் விரும்பி எதிர்பார்த்திருந்த அந்தக் காட்சி வந்தே விட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.