வந்தவினா: ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? அவர் செய்த தவறுகளா அல்லது விதியின் விளையாட்டா? தந்தவிடை: இதுவரை, இன்பம் துன்பம் என, உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது மட்டுமே. உங்கள் கேட்பு: உங்கள்செயல், உங்கள் எண்ணம், உங்கள் பேச்சு மற்றும் எழுத்தால் உருவாகிறது. இவற்றில் நீங்கள் மாண்பைக் கொண்டாடி இருந்தால் கிடைப்பது இன்பம். இவற்றில் நீங்கள் குற்றத்தைக் கொண்டாடி இருந்தால் கிடைப்பது துன்பம். எந்தப் புலம்பலும் குற்றத்தைக் கொண்டாடுதல் ஆகும். நீங்கள் நேரடியாக கடவுளிடம் கேட்டுப் பெறுவது அனைத்தும் உடைமைகள். அது ஏழேழு தலைமுறைக்கும் தொடர்ந்துவரும். விரிவான விளக்கத்திற்கு இந்தக் கட்டுரை அறிமுகப்படுத்தும் நூல் உதவும்.
நீங்கள் ஒப்புக் கொடுத்தவரின் செயலும், எண்ணமும், பேச்சும் எழுத்தும்கூட உங்கள் கேட்பாக அமைய முடியும்.
நீங்கள் ஒப்புக்கொடுத்த மனிதர், வழிகாட்டி, மதம், அரசியல் கோட்பாடுகள் மூலம் கிடைப்பவை உங்களுக்கு மட்டுமே பயன் அளிக்கும் உரிமைகள் ஆகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.