நியூசிலாந்து உற்சாகம்! இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். இனி அங்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது. பொது போக்குவரத்து சாதனங்கள் இயங்கும். கட்டுப்பாடுகள் கிடையாது. 27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவுக்கு விடை கொடுத்தது, நியூசிலாந்து. இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். இனி அங்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது. பொது போக்குவரத்து சாதனங்கள் இயங்கும். கட்டுப்பாடுகள் கிடையாது. அப்படியா! வியப்பாக இருக்கிறதே. எப்படி சாத்தியமானது இது? என்று நமக்குள் கேள்வி எழுவது இயல்பே. இந்தியாவில் இனி கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ளுங்கள் என்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கின்றார்களே அப்படியா? இல்லையில்லை. கொரோனாவிற்கு விடைகொடுக்கப்பட்டே இந்த தளர்வும் சுதந்திரமும். நியூசிலாந்து நாட்டில் கொரோனா தை மாத (பிப்ரவரி) இறுதியில் நுழைந்தது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த நாடு கொரோனா பரவலுக்கு எதிராக, மிகச்சரியாக, முதலில் கையில் எடுத்தது வெளிநாட்டினர் தொடர்புகளுக்கான தடைதான். இனியும், நியூசிலாந்துக்கு வெளிநாட்டினர் யார் வந்தாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தொடரும். மேலும் அந்த நாட்டின் எல்லைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அதனாலேயே கொரோனாவை வென்று வாகை சூடியிருக்கிறது நியூசிலாந்து. ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் தலைமைஅமைச்சர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேர்களுக்குத்தாம் கொரோனா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஆக்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் 48 மணி நேரம் எந்த அறிகுறியும் இன்றி, குணமான நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை ஆக்லாந்து பிராந்திய பொது நலங்குத்துறை உறுதி செய்தது. நியுசிலாந்து நாட்டில் கொரோனா தை மாத (பிப்ரவரி) இறுதியில் நுழைந்தது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த நாடு கொரோனா பரவலுக்கு எதிராக, மிகச்சரியாக, முதலில் கையில் எடுத்தது வெளிநாட்டினர் தொடர்புக்கான தடைதான். நமது நாட்டைப்போலவே நாளது 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (25.03.2020) அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. நான்கு நிலை எச்சரிக்கை அமைப்பை அந்த நாடு ஏற்படுத்தியது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் அடங்கினர். தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து கொண்டே வந்தது. நாளது 08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5122 (22.06.2020) அன்று இயல்பு நிலைக்குத் திரும்பி விடலாம் என நியூசிலாந்து அரசு முடிவு செய்து வைத்திருந்தது. ஆனால் அது இப்போது முன்கூட்டியே இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. காரணம், கடந்த 17 நாட்களாக புதிதாக ஒருவருக்கு கூட அங்கு கொரோனா தொற்று கிடையாது. இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். இனி அங்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது. பொது போக்குவரத்து சாதனங்கள் இயங்கும். கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால் நியூசிலாந்துக்கு வெளிநாட்டினர் யார் வந்தாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தொடரும். அதே நேரத்தில் அந்த நாட்டின் எல்லைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இதுபற்றி தலைமைஅமைச்சர் ஜெசிந்த ஆர்டெர்ன், “இந்த நாட்டில் யாருக்கும் கொரோனா நுண்ணுயிரித் தொற்று இல்லை என்று எனக்கு சொல்லப்பட்டபோது உற்சாக மிகுதியால் மெல்லியதொரு நடனமே ஆடிவிட்டேன். நாம் பாதுகாப்பான, வலுவான நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில் முந்தைய வாழ்க்கைக்கு இன்னும் பாதை எளிதாக இல்லை. ஆனால் நாம் நமது நலங்கு பதிலளிப்பில் கொண்டிருந்த உறுதியும், கவனமும் நமது பொருளாதார மறுகட்டமைப்பிலும் இருக்க வேண்டும். வேலைகள் செய்யப்படாத நிலையில், இது ஒரு மைல்கல் என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே நன்றி நியூசிலாந்து என்று கூறி முடிக்கிறேன்” என்றார். நியூசிலாந்து நாட்டில் கொரோனா விடை பெற வழிவகுத்து திட்டம் தீட்டி செயல்படுத்திய பெண் தலைமைஅமைச்சர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.