பிரிட்டன் மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் வழி பயணத் தடை விதித்திருப்பதற்கும், அங்கு காணப்படுகிற புதிய வகை கொரோனா நுண்நச்சு காரணமாகக் கூறப்படுகிறது. புதிய வகை கொரோனா நுண்நச்சு குறித்து நிறைய சந்தேகங்களும், நிறைய விடை தெரியாத கேள்விகளும் இருக்கின்றன. இந்த நுண்நச்சு குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் பணிகள் எல்லாமே தொடக்க நிலையில் தான் இருக்கின்றன. வேகமாக பரவும் திறன்கொண்ட புதிய வகை கொரோனா நுண்நச்சு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரவியிருக்கும் கொரோனா வகையை விடவும் 70விழுக்காடு வேகமாக பரவக்கூடியது என நம்பப்படுகிறது. பிரிட்டன் அதிகாரிகள், பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய நிலையை புதிய வகை கொரோனா தாண்டிவிட்டது என தெரிவிக்கிறார்கள். புதிய வகை கொரோனா வேகமாக பரவக்கூடிய வகையாகவும், வீரியம் அதிகமானதாகவும் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது. கடந்த மாதத்தில் 60விழுக்காடு தொற்று, இந்த வகை நுண்நச்சு காரணமாகவே ஏற்பட்டிருப்பதாக, பிரிட்டன் அரசின் மூத்த இயல்அறிவுத்துறை ஆலோசகரான பேட்ரிக் வேலன்ஸ் தெரிவித்துள்ளார். லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் இவ்வகை தொற்று அதிகமாக காணப்படுகிறது. டென்மார்க், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்த் நாடுகளில் மிகச்சிலருக்கு தொற்று இவ்வகை தொற்று காணப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்தப் புதியவகை, ஏற்கனவே இருக்கும் வகை நுண்நச்சை விட வேகமாக பரவுகிறது. ஆனால் அதிக ஆபத்தானது என்பது எங்கும் நிரூபிக்கப்படவில்லை என தகவல் தெரியவந்துள்ளது. நுண்நச்சுகள் எப்போதும் புது வகைகளை, மாற்றங்களை கைக்கொள்கிறது. பெரும்பாலான புதிய வகைகள் அழிந்துவிடுகின்றன. சில நேரங்களில் நுண்நச்சின் பண்புகளை மாற்றாமல் அது பரவுகிறது. மிக அரிதாக, புதிய அதிக அளவிலான மாற்றங்களுடன் பரவும் தன்மையைக் கொண்டிருக்கிறது. புதிய வகை நுண்நச்சுகள், தடுப்பூசிகள் வழங்கப்படால் தீங்கு விளைவிக்கும் விதமாக செயல்படுவதாக எங்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து, ஜெர்மனி, ப்ரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள், புதிய வகை நுண்நச்சுகள் எதுவும் பரவாமல் தடுக்க, அங்கிருந்து தங்கள் நாட்டுக்கான பயணத்தைத் தடை செய்துள்ளன.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரிட்டனில் வாழும் மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஒன்று கூடாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் மீது பயணத் தடை விதித்திருப்பதற்கும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாகக் கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



