Show all

பிசுபிசுத்தது ரிச்சர்ட் முல்ஜாடி இணையத்தில் கிளப்பிய பரபரப்பு!

ரிச்சர்ட் முல்ஜாடி இணையத்தில் கிளப்பிய பரபரப்பிலிருந்து, இணைய ஆர்வலர்களை எது உண்மை என்ற தேடலைநோக்கி திசை திருப்பியுள்ளது. அது என்ன?

24,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சிலிருந்து தப்பிக்க, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர், விமானத்திலுள்ள அனைத்து சீட்டுக்களையும் பதிவு செய்து பயணித்தாராம். 

நான்கு நாட்களுக்கு முன்பு ரிச்சர்ட் முல்ஜாடி அவரது மனைவியுடன் விமானத்தில் பயணித்துள்ளார். விமானத்தில் மற்றவர்களுடன் பயணித்தால் எங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் மொத்த விமான இடங்களையுமே பதிவு செய்துள்ளார். காலியான விமானத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் ரிச்சர்ட் முல்ஜாடி, தனது படவரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தனியார் ஜெட் விமானத்தில் செல்லும் செலவைவிட இப்படி அனைத்து இடங்களையும் பதிவு செய்த வகையில் குறைந்த செலவே ஆனது என்று பதிவிட்டிருந்தார். விமானத்தில் வேறு யாரும் ஏறவில்லை என்பதைப் பல முறை உறுதி செய்ததாகவும் மற்ற பயணிகள் இருந்தால் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்ததாகவும் அவர் படவரியில் குறிப்பிட்டிருந்தார். 

இருப்பினும், ரிச்சர்ட் முல்ஜாடி கூறியுள்ளதை விமான நிறுவனம் மறுத்துள்ளது. ரிச்சர்ட் முல்ஜாடி வெறும் இரண்டு பயணச்சீட்டுக்களை மட்டுமே பதிவு செய்ததாக உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் விமான நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த நிலையில் ரிச்சர்ட் முல்ஜாடி இணையத்தில் கிளப்பிய பரபரப்பிலிருந்து, இணைய ஆர்வலர்களை எது உண்மை என்ற தேடலைநோக்கி திசை திருப்பியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.