கொரோனாக்கான தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய நலங்குத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 23,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில்- கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த மாதமே, முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின். எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய நலங்குத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரஷ்ய நலங்குத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: கோவிட் 19-க்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக்-வியின் முதல் தொகுப்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. தேவையான தகுதி சோதனைகள் வெற்றி பெற்றதையடுத்து பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிராந்திய பகுதிகளுக்கு விரைவில் இந்த மருந்துகளின் முதல் தொகுப்பு கிடைத்து விடும் என தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



