Show all

உலக அளவில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்! ஐநா கடும் எச்சரிக்கை: கொரோனா பின்விளைவுகளைக் காரணம் காட்டுகிறது

உலகில் பின் தங்கிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பாகுபாட்டையும், மனித உரிமை மீறல்களையும் மேலும் சண்டை சச்சரவுகளையும், பசியையும் வறுமையையும் அதிகரிக்கவே செய்யும் என்றும், உலக நாட்டு அரசுகள் வெளியில்- தேவையற்ற போர்நடவடிக்கைகளைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்றும் ஐநா எச்சரிக்கையை விடுத்துள்ளது.

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஐநா அரசியல் தலைமை ரோஸ்மேரி டிகார்லோ, ஐநா மனிதார்த்த தலைமை மார்க் லோகாக் ஆகியோர் கரோனாவின் உலக அளவிலான தாக்கம் குறித்து உலக நாட்டு அரசுகளுக்கு ஒரு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.

உலகில் பின் தங்கிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பாகுபாட்டையும், மனித உரிமை மீறல்களையும் மேலும் சண்டை சச்சரவுகளையும், பசியையும் வறுமையையும் அதிகரிக்கவே செய்யும் என்பது அந்த கடும் எச்சரிக்கை.

உலகம் முழுதும் கரோனாவுக்கு 26 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,60,000 பேர் மரணமடைந்துள்ளனர். ஐநா குழுவில் அவர்கள் அளித்த அறிக்கையில், கொரோனாவினால் ஏற்படும் மறைமுக பொருளாதார, நலங்கு விளைவுகள் பலவீனமான நாடுகளில் அதிக வறுமை, ஆயுள் குறைதல், மேலும் பட்டினிக் கொடுமை, கல்வியின்மை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. மனிதார்த்த நெருக்கடிகள், அகதிகள் நெருக்கடி அதிகம் ஏற்பட்டுள்ள உடனடியாக தாக்குறும் நாடுகளில்தான் கொரோனா பாதிப்புகள், மரண விகிதங்கள் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

இந்தநாடுகளில் கரோனா வைரஸ் சோதனைகள் மிகவும் குறைவு. இந்நாடுகளில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் தனிமைப்படுத்தலுக்குப் பயந்து சோதனையை மறுக்கின்றனர்.

ஆனால் ஒரே நல்ல பாடு இந்த பலவீனமான நாடுகளில் கொரோனா மரணங்கள் குறைவாக இருக்கின்றன.

ஆகவே கொரோனா பெருந்தொற்று ஆபத்து நீங்கும் வரை உலக அளவில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். கொலம்பியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், கேமரூன் நாடுகளில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

ஏமன், சிரியா, மற்றும் பல இடங்களில் அமைதி வழிக்கு கட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் பார்வையில் ‘நாடுகள் கரோனா பாட்டில் வெளிப்படையாக இல்லை, தக்கம் குறித்த எதிர்கொள்ளில் திறமையாகச் செயல்படவில்லை’ என்ற கருத்தே நிலவுகிறது. கொரோனா முன்னெடுப்பில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் இந்தப் பார்வையை அதிகரிக்க மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் சிகிச்சையில் ஏற்றத்தாழ்வுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறைகள், ஊடகங்களை பெரிய அளவில் கட்டுப்படுத்துவது, குடிமைஉரிமைகள் மறுக்கப்படுதல், கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுதல் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.

சமூக ஊடகங்கள் பொய்யையும் புரட்டையும் பரப்புவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன, நாடுகள் இதைக் கட்டுப்படுத்துவதில்லை. சமூக ஊடகங்களில் பலிகடா ஆக்குவதும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளும் அதிகரித்துள்ளன, குறிப்பாக புலம் பெயர்ந்தோர் மற்றும் அன்னிய தேசத்தவர் மீது வசையும், வெறுப்பும் பரப்பப் படுகிறது.

27 நாடுகள் உணவுப்பாதுகாப்பில் மிகவும் அதிகமாக பின்னடைவு கண்டுள்ளன. ஊட்டச்சத்தின்மை, உணவு உள்ளிட்ட சிக்கல்களினால் 70 லட்சம் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர். இவ்வாறு ஐநா பாதுகாப்பு குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை நேரடியாக நடுவண் பாஜக அரசுக்கே தெரிவிப்பது போலவே எடுத்துக் கொண்டு- தங்கள் நடவடிக்கைளில் கொஞ்சமாவது அறிவை நடுவண் பாஜக அரசு முன்னெடுக்குமானால் இந்தியாவிற்கு நல்லது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.