Show all

மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஒருசேரத்தரும் பிட்காசின் விலையேற்றம்! பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை யென்பதே அதிர்ச்சி


பிட்காசு வணிகத்தைத் தற்போது இந்தியா அங்கீகரித்து இருந்தாலும், அப்படியா? அங்கீகரித்துள்ளதா? என்று கேட்கும் நிலை இந்தியாவில் தொடர்வதால், பிட்காசு விலையேற்றம் இந்தியாவிலும் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைய காலகட்டத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்களின் கவனம், பிட்காசின் பக்கம் திரும்பியுள்ளது என்றால் அது மறுபதற்கில்லை. ஏனெனில் தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களாக பிட்காசின் விலையேற்றத்தினைப் பார்க்கும் போது விரைவில் தங்கத்திற்கு எதிராக வந்து விடும் போல் இருக்கிறது. 

உலகின் பார்வையை ஈர்த்துள்ள பிட்காசின் மதிப்பானது கடந்த மாதம் தான் 20,000 டாலர்களை தாண்டியது. இதே கடந்த ஒன்பது மாதங்களில் 800 விழுக்காடு ஏற்றமும் கண்டுள்ளது. பிட்காசுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், முதலீட்டாளர்கள், தங்கத்திற்கு பதிலாக பிட்காசினை பாதுகாப்பு புகலிடமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.   

கொரோனா பொருளாதாரத்தைப் புரட்டி எடுத்துவரும் நிலையிலும், பிட்காசின் விலையானது, தங்கத்தினை ஒரங்கட்டி புதிய வரலாற்று உச்சத்தினை எட்டியது. இதற்கிடையில் தற்போது மூன்று நாட்களாக மீண்டும் புதிய உச்சம் தொட தொடங்கியுள்ளது. சில நாடுகளில் எண்ணிமச்செலவணி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் பிட்காசின் விலையானது கூடிக் கொண்டே போகிறது. 

கொரோனா காலத்திலும் பிட்காசின் விலையானது, எந்தவொரு முதன்மைக் காரணிகளாலும் பாதிக்கப்படவில்லை. இதனால் மிகபெரிய முதலீட்டாளர்கள் கூட பிட்காசினை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் மிக ஆர்வம் காட்டி வருவதை பலமுறை நமது செய்தியில் சுட்டிக்காட்டி இருந்திருக்கிறோம்.   

இப்படி ஒட்டுமொத்தமாக எண்ணிமச்செலவணி முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், எண்ணிமச்செலவணி விலையும் பலமான ஏற்றம் கண்டு வருகின்றது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல, கடந்த சனிக்கிழமையன்று பிட்காசின் மதிப்பு 30,000 டாலர்களை முதல் முறையாக தொட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று கிட்டதட்ட 35,000 டாலர்களை நெருங்கியுள்ளது. 

அண்மையில் நிபுணர்கள் முதலீட்டாளர்கள் எண்ணிமச்செலவணியை ஏற்றுக் கொள்வது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பாதிக்கக்கூடும் என்றும் கூறியிருந்தனர். உண்மையில் பிட்காசின் விலையானது கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிட்டதட்ட 5000 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.