இதே இந்தியாவில், ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்கவாத சிந்தனை கொண்ட ஆட்களை அமெரிக்க உளவாளி என்று அடையாளப் படுத்தும் போக்கு இருந்து வந்தது. தற்போது இந்தியாவை ஆளும் பாஜகவே ஆதிக்கவாத வலதுசாரி சிந்தனை உடையது என்கிற நிலையில், இவர்களின் ஆதரவாளர்கள் அமெரிக்கவில் கால்பதித்திருப்பதான செய்தி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கிறது. 10,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் ஒற்று முகமை, ஐக்கிய அமெரிக்காவின் முதன்மை உளவு நிறுவனம் ஆகும். சிஐஏ என்று பரவலாக அறியப்படும் இது அமெரிக்க அரசின் ஒரு துறையாகும். தேசிய பாதுகாப்பு பற்றிய புலனாய்வு மதிப்பீடுகளை அமெரிக்க அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு வழங்குவதுடன், அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் ஆணைப்படி மறைமுகச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போரின் போது, அச்சு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படைத்துறை ஒற்று நடவடிக்கைகளை ஒருங்கமைக்க உருவாக்கப்பட்ட, மேல்நிலை உத்தி சேவைகளுக்கான அலுவலகம் என்ற அமைப்பின் வாரிசு அமைப்பே சிஐஏ. போர் முடிந்த பின், இந்தியா விடுதலை பெற்ற காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம் சிஐஏ அமைப்பைத் தோற்றுவித்தது. இதன் முதன்மைப் பணிகள்: பிற நாட்டு அரசுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் மீது வேவு பார்த்து, தகவல்களைச் சேகரித்து அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அளிப்பதும் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்குவதுமாகும். மேலும் துணை இராணுவப் படைகளைப் பயன்படுத்தி மறைமுக படைத்துறை நடவடிக்கைகள், தனது சிறப்புச் செயல்பாடு பிரிவின் மூலம் பிற நாட்டு அரசியல் சூழலில் ஆதிக்கம் செலுத்ததல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை சிஐஏ மற்றும் அதன் பொறுப்புகள் புனரமைக்கப்பட்டன. அது வரை அமெரிக்க அரசின் பல ஒற்று நிறுவனங்களை ஒருங்கமைக்கும் பணியினை சிஐஏ செய்து வந்தது. அவ்வாண்டு இயற்றப்பட்ட ஒற்று புனரமைப்பு மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு இயக்குனரகம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அமெரிக்க ஒற்று முகமைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அதற்கு வழங்கியது. தற்போது தேசியப் புலனாய்வு இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் பதினாறு அமெரிக்க உளவு அமைப்புகளுள் ஒன்றாக சிஐஏ உள்ளது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிஐஏ வலுவில் இருந்த போது, இந்தியாவில் ஆதிக்கவாத சிந்தனை கொண்ட ஆட்களை அமெரிக்க உளவாளி என்று அடையாளப் படுத்தும் போக்கு இருந்து வந்தது. தற்போது இந்தியாவை ஆளும் பாஜகவே ஆதிக்கவாத வலதுசாரி சிந்தனை உடையது என்கிற நிலையில், இவர்களின் ஆதரவாளர்கள் அமெரிக்கவில் கால்பதித்திருப்பதான செய்தி வெளியாகி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கிறது. பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடனான தொடர்பு காரணமாக இந்திய மரபுவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் புதன் கிழமையன்று பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டை மரபுவளியாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் முதன்மைப் பதவிகளில் பணிபுரிய இந்திய மரபுவளியைச் சேர்ந்த சுமார் 20 பேரை பரிந்துரைத்திருந்தார். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவுள்ள இந்தியர்களுக்கு இது மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது இருப்பினும், முன்பு பரிந்துரைத்திருந்த பட்டியலுடன் பார்க்கும்போது சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்கள் இதில் விடுபட்டுள்ளன. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடனான தொடர்பு காரணமாக இவர்களை பைடன் நிர்வாகம் விலக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவிலுள்ள சுமார் 19 இந்திய அமைப்புகள் ஒன்றாக பைடனுக்கு மடல் ஒன்று அனுப்பினர். அதில், ‘இந்தியாவில் தீவிர வலதுசாரி ஹிந்து அமைப்புகளுடன் உறவு கொண்ட பலர் ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளனர். பைடன் நிர்வாகத்தில் இதுபோன்ற நபர்களுக்கு இடம் அளிக்கக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மடலில் சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இருவரும் ஹிந்து மதவாத குழுக்களிடமிருந்து நிதியுதவி பெற்றவர்கள் என்றும் ஹிந்து ஆதிக்கத்திற்கு ஆதரவாகப் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டவர்கள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இருவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வெளிநாட்டு முகவர்கள் என்ற குற்றச்சாட்டும் அதில் முன்வைக்கப்பட்டிருந்தது. மேலும், ‘டிரம்பிற்கு எதிரானவர்களைப் போல காட்டிக்கொண்டு, சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ள ஜனநாயகக் கட்சியில் முதன்மை இடங்களைப் பிடித்துவிட்டனர். ஆனால் இந்தியாவில், இவர்கள் டிரம்பின் வெள்ளை இனவாத சிந்தனையாளர்களுக்குச் சமமானவர்கள், ஹிந்து மேலாதிக்கவாதிகள். அமெரிக்காவில் ஹிந்து சிறுபான்மையினராக தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்கள், இந்தியாவில் மேலாதிக்கவாதிகளாக உள்ளனர். அமெரிக்காவில் அவர்கள் இனவெறியை எதிர்த்துப் போராடுவதைப் போலவும் பன்முக கலாச்சாரத்தை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் தங்களது சொந்த இனவெறியை நிலைநிறுத்துகிறார்கள். எனவே, உங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஹிந்து மேலாதிக்கம் உட்பட எந்த மேலாதிக்கத்தை ஆதரிக்கும் ஆட்களும் உங்கள் நிர்வாகத்தில் இருக்கக் கூடாது’ என்று பைடனுக்கு இந்திய அமைப்புகள் எழுதிய மடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மடலைத் தொடர்ந்தே அவர்களின் நியமன ஆணை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சோனல் ஷா, பைடனின் ஒற்றுமை குழுவில் பணியாற்றியவர். அவரது தந்தை ஆர்எஸ்எஸ் நடத்தும் ஏகல் வித்யாலயாவை தோற்றுவித்தவர். மேலும், பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் குழுவின் அமெரிக்கப் பிரிவின் தலைவராகவும் அவர் இருந்தார். அமித் ஜானி இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் பைடனின் ‘முஸ்லீம் அவுட்ரீச்’ கருத்துப்பரப்புதலின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களுடன் இவர் நெருக்கமான உறவைக் கொண்டு உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.