உலகத் தொடர்பில் ஒவ்வொரு நாடும் ஒரு முதன்மையான வணிகப்பொருளைக் கொண்டுள்ளன. உலகத் தொடர்பில் இந்தியாவிற்கான தனித்துவமான வணிகப் பொருள் இல்லாத நிலையில்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் முதன்மை வணிகப் பொருளான ஆயுத விற்பனையை இந்திய வருகையின் போது 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாத்தியமாக்கியிருக்கிறார். 14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெட்ரோல்! இது மட்டுமே வளமான முன்னேற்றத்திற்குப் போதுமானதாக இருக்கிறது அராபிய நாடுகளுக்கு. இந்த அட்சய பாத்திரம் ஆகூழ் வயமாக அவர்களுக்கு கிடைத்து விட்டது. அரபிய நாடுகளின் சந்தைப்பொருள்: பெட்ரோல் இன்றைக்கு, இந்தியாவை முன்னெடுத்துச் செல்லுகிறவர்களாகவும், தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியவர்களாகவும் இருப்பவர்கள்- ஆரியர்கள். ஆங்கிலேயர் சந்தைப்பொருள்: ஆட்சி, அதிகாரம் இவை மட்டுமே. நான்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களிடம் பல உற்பத்திகள், பற்பல திறன்கள், கடலோடல்; உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்கள் இருந்த போதும்- ஆனால் ஆரியர்களின் சந்தைப்பொருள்: இருக்கட்டும்- டிரம்ப் வருகையால் இந்தியா அமெரிக்கவுக்கு இடையில் என்ன வணிகம் மேற்கொள்ளப்பட்டது? அந்த வணிகப் பொருளால் ஆதாயம் அடைந்தது இந்தியாவா? அமெரிக்காவா? என்பது குறித்து பார்க்கலாம். அதென்ன ஆட்சி அதிகாரம் என்றால்: அலைக்கற்றை வணிகம், தொலைதொடர்பு அனுமதி வணிகம், காப்பீடு வணிக அனுமதி வணிகம், கார்ப்பரேட்டுகள் அனுமதி வணிகம், வருமான வரி, சரக்குசேவை வரி என்பனவெல்லாம் வெறுமனே அதிகாரம் சார்ந்தவைகளே. அந்த வகைக்கு வருமானம் தர உற்பத்தியில் ஈடுபடுவன இந்திய மாநிலங்களே. குறிப்பாக தென்னக மாநிலங்களே. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மாநில உற்பத்தியை- சிறு முதலாளிகள் மூலமாக முன்னெடுப்பதற்கு- வங்கிகளை சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கடன் வழங்க ஆணையிட்டன. அதென்ன சிறு முதலாளிகள் மூலமாக பிச்சு பிச்சு ஆதாயம் பார்ப்பது என்று பணமதிப்பு நீக்கத்தின் மூலம், ஒட்டுமொத்த சிறு தொழில்களையும் முடக்கி விட்டு, கார்ப்பரேட்டுகள் மூலமாக நேரடியாக கத்தையாக ஆதாயம் பார்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது நடப்பு பாஜக ஆட்சி. இந்தியாவின் முதன்மையான வெளிநாட்டுச் செலவான, பெட்ரோலை மிச்சம் பிடிக்கவென்று வேளாண்மையையும் தொலைத்துக் கட்டிவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது நடுவண் பாஜக அரசு. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய வருகை இரண்டு நாட்களாக உலகின் பேசுபொருளாக அமைந்தது. இந்திய நடுநிலையாளர்களின் மனதில் இந்த வருகையால் ஆதாயம் அடையப்போவது டிரம்ப்பால் அமெரிக்காவா? மோடியால் இந்தியாவா என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. அள்ளிச்சென்றது அமெரிக்க அதிபர்தான். ஆதாயம் அடையப் போவது அமெரிக்காதான் என்பது தெரிந்து விட்டது. இந்தியா-அமெரிக்கா இடையே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. நடுவண் அரசுகள் வெளிநாட்டு வணிகத்தை முன்னெடுக்க உரிய வணிகப்பொருளை தேடாத வரை, மாநில அரசுகள் கடுமையாக உழைப்பதும், நடுவண் அரசில் அமைந்தவர்கள் ஹிந்திக்கும், ஹிந்துத்துவாவிற்கும், அதிகாரிகளுக்கான சம்பளத்திற்கும் அதை வீணடித்துக் கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகவென, நிருவாக மற்றும் உடலுழைப்பு கூலிகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கும் நாடுகளாக உலக உழைப்பாளிகளுக்கு பச்சைக் கம்பளம் விரிக்கின்றன இந்த நாடுகள்.
சந்தை: உலக மக்கள்
கருத்துப்பரப்புதல்: எரிபெருள் என்பதால் தேவை எழவில்லை.
ஆக-
வளமான முன்னேற்றத்திற்கு!
ஒற்றைச் சந்தைப்பொருள்,
சந்தை,
கருத்துப்பரப்புதல் ஆகியன போதுமானது.
நேற்று உலகம் முழுமையும் கட்டி யாண்டவர்கள்- ஆங்கிலேயர்கள்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் ஒட்டு மொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தவர்கள்- தமிழர்கள்.
நேற்று- ஆங்கிலேயர், மற்றும் தமிழர் சந்தைப்பொருள் என்னவாக இருந்தன?
இன்றைக்கும் ஆரியர் சந்தைப் பொருள் என்னவாக இருக்கிறது?
வணிகர் என்ற போர்வையில் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே சந்தைப் படுத்தினார்கள்.
இந்தியாவிற்கு அவர்கள் விடுதலை கொடுத்து விட்டுச் சென்றாலும்,
நாம் நம் மக்களுக்கான சட்டம் அதிகாரங்களை அமைத்துக் கொள்ளவேயில்லை. ஆங்கிலேயர் சட்ட அதிகாரங்களுக்கும் அவைகளைப் பதிந்து வைத்திருக்கிற ஆங்கில மொழிக்கும் நாம் நுகர்வோர்களாகவே இருந்து கொண்டிருக்கிறோம்.
அவர்கள் விடுதலை கொடுத்துவிட்டுச் சென்ற பெரும்பாலான நாடுகளின் நிலையும் இதுதாம்.
(தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் புகழ் பெற்றதாக இருந்துள்ளன. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள், வணிக தலங்களாக அமைந்திருந்தன. இத்துறைமுகங்கள் நான்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல், கொற்கை பெருமைகளைப் பாராட்டியுள்ளார். மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில், இந்த நகர அமைப்புகள், மாட மாளிகைகள் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்துக்கு அடிமையானதாகவும் எகிப்து பொருளாதாரம் தமிழர்களால் சுரண்டப்படுவதாகவும் எகிப்து நாட்டு அறிஞன் தாலமி சாடுகிறான். வங்கக் கடலில் தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடுகளும், ஆளுமையும் கொடிக் கட்டிப் பறந்தது. கொற்கை, பழைய காயலில் முத்து எடுக்கும் பாங்கினை நற்றினையும், ஐங்குறுநூறும் சொல்கின்றது. மணப்பாடு, உவரி பற்றியும் இலக்கியத்தில் ஆதாரங்கள் உள்ளன. காவிரிப் பூம்பட்டினத்தைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மார்கோ போலோவின் எழுத்துக்கள் வர்ணிக்கின்றன.)
கொற்கை முத்து மற்றும் சேர நாட்டு மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லியத் துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற உற்பத்திப் பொருள்களே தமிழர்தம் சந்தைப் பொருட்களாக இருந்தன.
அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்-
இராமாயனம், மகாபாரதம் மட்டுமே.
தமிழர்கள் ஆரியர்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இழந்த-
இலக்கியங்கள், வானியல் நிமித்தக அகத்தியல் மருத்துவ நுட்பங்கள், கோயில்கள், இறையிலி நிலங்கள், தேவர்அடியார்களாக ஏழைத் தமிழ்ப்பெண்களின் மானம், தாழ்ந்த சாதியினராக நாம் இழந்த நிலம், தொழில், வணிக, ஆட்சி உடைமைகள் ஆகிய அனைத்திற்கும் நாம் பெற்ற நுகர்வு இராமாயனம், மகாபாரதம் மட்டுமே.
இன்றைக்கும் குறிப்பாக சன், விஜய் மற்றும் அனைத்துத் தமிழ்த் தொலைக்காட்சி வழியாக நேரடியாக இராமயனமாகவும் மகாபாரதமாகவும் துணைக்கதைகளாக அனுமன் நாகினி அகியவற்றுக்கெல்லாம் நாம் சந்தையாக இருந்து கொண்டுதானே இருக்கிறோம்.
அரபு நாடுகளுக்குப் பெட்ரோல் போல, நடப்பில் நடுவண் பாஜக அரசு இந்திய வணிகப்பொருளாக முன்னெடுப்பது என்ன? இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரஸ்; ஆட்சியிலும் சரி, நடப்பு பாஜக ஆட்சியிலும் சரி, வணிகப்பொருள் உள்நாட்டு வணிகத்திற்கானது மட்டுமே. அந்த வணிகப்பொருள் ஆங்கிலேயர் விடுதலையின் போது நடுவண் அரசிடம் விட்டுச் சென்ற ஆட்சி அதிகாரம் மற்றும் பன்னெடுங்காலமாக ஆரியர்தம் வணிகப் பொருளாக இருந்து வருகிற இராமாயனம், மகாபாரதம் மட்டுமே.
அமெரிக்காவிற்கு நடப்பில் முதன்மையான வணிகப்பொருள் என்ன? பாதுகாப்பு தளவாடங்கள் விற்பனை. அதாவது ஆயுதங்கள். அதை திறம்பட முன்னெடுத்திருக்கிறார் நேற்றைய இந்திய வருகையில் டிரம்ப்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



