Show all

நாசாவின் வியப்பூட்டும் நிழற்படம்! செவ்வாய் கோளில் கூட்டம் கூட்டமாக விலங்குகள்

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செவ்வாய் கோளில் கூட்டம் கூட்டமாக விலங்குகள் மேய்வது போன்ற படத்தை ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது.

செவ்வாய் கோளில் நீர் இருக்கிறதா உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன.

இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 2 ஆண்டுகளுக்கு முன்பு, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கோளுக்கு அனுப்பி வைத்தது.

அந்த ரோவர் விண்கலம் செவ்வாய் கோளின் நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து புவிக்கு அனுப்பி வருகிறது. இந்தப் படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி பல்வேறு விதமான யூகங்களை கூறி வருகின்றனர்.

ஒரு படத்தில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. அதனைப் பார்த்த நிபுணர்கள் செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்து உள்ளது. இதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பண்டைய நாகரிகத்தினர் கட்டிட பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளதாக கூறினர்.

இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரோவர் சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான விலங்குகள் கூட்டமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது, இது செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராம் என்றார். இது செவ்வாய் கோளில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாக இருக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,742.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.