16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியார் மணி. இவர் இன்று டெல்லியில் உள்ள பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு தூதஞ்சல் மூலம் ஒரு மனு மற்றும் எலி மருந்து சிப்பம் அனுப்பினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பொதுமக்களில் ஒருவரான நான் வைக்கும் கோரிக்கை, உங்கள் கட்சி சார்பாக 37 பாஉக்கள் இருந்தும் தமிழக உழவர்களின் பல ஆண்டுப் பிரச்சனைக்கு உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்காக விலகாமல் தற்கொலை செய்வோம் என்று டெல்லியில் தங்கள் கட்சியை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் பேசியது வரவேற்கத்தக்கது. 37 பேரும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்சனையைத் தீர்க்கவும். தங்களுக்கு உதவும் நோக்கில் எலி மருந்து அனுப்புகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,742.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



