சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணியிரி தாக்குதல் நோயின் பெயரை உலக நலங்குத்துறை நிறுவனம் மாற்றியுள்ளது. இனி கெரோனா நுண்ணுயிரி நோய் என்ற பெயர் கோவிட்-19 என பேசப்படும். 01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணியிரி தாக்குதல் நோயின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை உலக நலங்குத்துறை நிறுவனம் முன்னெடுத்துள்ளது. கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருள். இதனால் மலர் மகுடம் போன்ற தோற்றம் கொண்ட பல பொருட்களுக்கு கொரோனா என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், மலர் மகுடம் போன்ற தோற்றம் கொண்ட நுண்ணுயிரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டபோது, அதற்கும் கொரோனா நுண்ணுயிரி என முதலில் பெயர் சூட்டப்பட்டது, பின்னர் அந்த நுண்ணுயிரியின் 6 இனங்களும் கொரோனா என்றே அழைக்கப்பட்டன. அந்த முதல் 6 கொரோனா நுண்ணுயிரிகள் அனைத்தும் ஆபத்து குறைவானதாகவே இருந்தன.
இந்நிலையில் சீனாவில் கடந்த ஆண்டில் இறுதியில் பரவிய புதிய நுண்ணுயிரி, கொரோனாவின் 7ஆவது இனமாக இருந்ததால், அதற்கும் ‘கொரானோ நுண்ணுயிரி’ என்ற பெயரே வைக்கப்பட்டது. இந்த நுண்ணுயிரி முந்தைய கொரோனா நுண்ணுயிரிகளை விடவும் அபாயகரமாகதாக உள்ளது. உலகெங்கும் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய 7ஆவது வகை கொரோனா நுண்ணுயிரிக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.
இதனால் கொரோனா என்ற சொல்லைப் பயன்படுத்திவரும் பல்வேறு மக்களும், நிறுவனங்களும் நுண்ணுயிரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக மெக்சிகோ நாட்டில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனமான ‘கொரோனா பியர்’ இதனால் வணிகச்சிக்கல்களைச் சந்தித்தது. எனவே கொரோனா நுண்ணுயிரியின் பெயரை மாற்றினால் இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாயைத் தருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.
இப்படிப்பட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்ற உலக நலங்குத்துறை நிறுவனம், கொரோனா நுண்ணுயிரியின் பெயரை மாற்றி உள்ளது. அதற்கு கொவிட்-19 (ஊழஎனை-19) என்று தற்போது பெயர் சூட்டப்பட்டது. கொரோனா, வைரஸ், டிசீஸ் ஆகிய 3 சொற்களில் இருந்து இந்தப் புதிய சொல் உருவாக்கப்பட்டு உள்ளது, இதில் உள்ள 19 என்பது, நுண்ணுயிரி பரவத் தொடங்கிய ஆங்கில ஆண்டான 2019ஐக் குறிக்கின்றது.
நுண்ணுயிரியின் இந்தப் புதிய பெயர் எந்த ஒரு இடத்தையோ, நபரையோ, குழுவையோ, விலங்கையோ குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக நலங்குத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



