கெரோனா தொற்று கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ வின் மனைவி சோபி ட்ரூட்டோவுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனடாவில் கரோனா தொற்றால் இதுவரை 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். இந்த நிலையில் கெரோனா தொற்று கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ வின் மனைவி சோபி ட்ரூட்டோவுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் சோபியா ட்ரூடோ நன்றி தெரிவித்துள்ளதுடன், நாம் இந்த தருணத்தை ஒன்றாக இணைந்து விரைவில் கடப்போம். உங்கள் உடல் நலத்தை பற்றி உண்மையான தகவலை கூறுங்கள். சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ வுக்கு இதுவரை கொரோனா அறிகுறிகள் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரும் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தலைமை அமைச்சர் அலுவலகத்துக்கு ஜஸ்டின் செல்ல மாட்டார் என்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார் என்றும் கனடா அரசு அறிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



