Show all

2021 ஆங்கில ஆண்டை எப்படி நமது வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்! கணியக்கலை அடிப்படையில், ஓர் அலசல்

கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இந்த ஆண்டை ஒவ்வொருவரும் வெற்றி ஆண்டாக்கிக் கொள்வது எப்படி என்று விளக்குவதே இந்தக் கட்டுரை. மூடநம்பிக்கையில் உங்களை முடக்குவதானதன்று கணியக்கலை. அறிவாளராக ஆற்றலை  வெளிப்படுத்தக் கற்றுத்தருவதே இந்தக் கணியக்கலை. 

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தனிமனித முன்னேற்றத்திற்குத் தமிழர் உருவாக்கிய மூன்று கலைகள் 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை 2.கணியக்கலை 3.மந்திரக்கலை 

தனிமனித முன்னேற்றத்திற்கான இந்த மூன்று கலைகளில் முதலாவது மட்டுமே, தப்பும் தவறுமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவற்றுள் இரண்டாவது மற்றும் மூன்றாவது கலைகள், நீங்கள் கடையில் வாங்கிப் படிக்கிற, அப்படியே முழு நூலாக எல்லாம் இல்லை. அந்தக் கலைகள் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனி நாம்தாம் தொகுக்க வேண்டும்.

தமிழர் வாழ்ந்து கண்டறிந்த அனுபவங்களைத் தொகுப்பது மிக அரிது. ஆனால் தொகுத்து விட்டால், அதை வைத்துக் கொண்டு உலக மனிதர்களில் எவ்வளவு உயரம் வேண்டுமானால் தமிழன் வளரமுடியும்.

அந்த முன்னேற்றக்கலைகள் மூன்றில் 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை. 2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையாகும். 3.மந்திரக்கலை என்கிற நமக்கான இயக்கத்தை (தலைஎழுத்தை) நாமே வடிவமைத்துக் கொண்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையாகும்.

இயல்பாக இருத்தல், அறிவூட்டத்தை முன்னெடுத்து அதன் வழி இயங்குதல் என்கிற இரண்டு நிலைகளில் ஒன்றில்தான் ஒவ்வொரு மனிதனும் இயங்கிக் கொண்டிருப்பான். குறிப்பாக இத்தனை நெடிய அனுபவம் உள்ள தமிழனுக்கு அறிவூட்டத்தை முன்னெடுத்து அதன் வழி இயங்குதலே இயல்பாக அமைந்திருக்கிறது. 

இன்றைய தமிழனின் தளர்ச்சிக்கு காரணம்: ஒவ்வொரு தமிழனும் அறிவூட்டத்தை முன்னெடுத்து அதன் வழி இயங்குதலே இயல்பாக கொண்டிருந்தாலும், பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், மதங்கள் என்று அயலவர்களே அனைத்து நிலைகளிலும் தமிழகத்தில் அதிகாரத்தில் இருப்பதால், தமிழகத்தின் இயல்பு பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த அயலாக இருக்கின்ற நிலையில்- அயலில் இறங்கி அடிமைத்தனத்தில் ஆழ்ந்தும், ஆறிவூட்டத்தில் அரைகுறையாக இறங்கி தோல்விகளையுமே தொடர்ந்து சந்தித்து வருகிறான் தமிழன். அதனாலேயே தமிழன் தமிழின் பெருமையையும் கொண்டாடுவான். ஆனால் தமிழால் முடியும் என்று தமிழ் வழிக்கல்விக்கு மழைக்குக் கூட ஒதுங்க மாட்டான். 

தமிழர் அமைத்து வைத்திருக்கிற இந்த மூன்று முன்னேற்றக் கலைகளில் முதலாவதான 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலையில் இயல்பாக இருத்தல் என்கிற நிலையில் இயங்குகிறவர்களால் மட்டுந்தாம், இதில் பயன்பெற முடியும். அது ஏன் அப்படி என்கிற செய்திகளை வேறு கட்டுரைகளில் பார்ப்போம். 

ஆறிவூட்டத்தோடு இயங்குகிறவர்களுக்கு 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை பெரிதாக பயன்தராது. தங்கள் அறிவூட்டத்தால் இயற்கையின் இயக்கப் போக்கில் குறுக்கிட்டு திசை திருப்புவார்கள். இவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு இரண்டாவது கலையான 2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையை முன்னெடுக்கலாம். 

2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற இந்தக் கலைக்குப் ‘பெயர்’ தான் அடிப்படை. இந்தக் கலைக்கு உங்கள் பெயரை தமிழில்தான் கட்டாயம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் நீங்கள் விரும்பும் இயல்பை முன்னெடுக்கிற வகைக்கு அந்த இயல்புக்குரிய எண்ணில் பெயரை அமைத்துக் கொள்ள வேண்டும். 

நான் இன்னும் கூடுதலாக அறிவூட்டத்தில் இயங்குகிறவன். எனக்கு உலகின் பல இனங்களின் தொன்மங்களைப் பொருத்திப் பார்க்க தெரியும். அவைகளை யெல்லாம் விட தனிமனித முன்னேற்றத்திற்கான செய்திகள் அதிகமாகவும், தெளிவாகவும், நேர்த்தியாகவும், சிறப்பாகவும் தமிழில் பதிந்த வைத்திருக்கப்பட்டிருக்கிறது என்று நிரூபித்தால் அந்த வகையை எனது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறவர் என்றால், 

உண்மையை நடுநிலையில் நின்று தெளிகிற அறிவை என்னால் முன்னெடுக்க முடியும். எந்த அயலின் வாழ்மான நிர்பந்தமும் எனக்கு இல்லை. உண்மையிலேயே எனக்கு தனி மனித முன்னேற்றம் வேண்டும் என்று கருதினால் உங்கள் முன்னேற்றத்திற்குச் சிறப்பாக பயன்படுகிற கலை தமிழில் இருக்கிறது. அது மூன்றாவது தமிழர் கலையான  3.மந்திரக்கலை என்கிற நமக்கான இயக்கத்தை (தலைஎழுத்தை) நாமே வடிவமைத்துக் கொண்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையாகும்.

இந்தக் கட்டுரையில்- கணியக்கலை அடிப்படையில், 2021 ஆங்கில ஆண்டை எப்படி நமது வெற்றிக்கு உறவாக்கிக் கொள்ள முடியும் என்பதே நமது ஆய்வாகும். 

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரில். அந்தப் பெயரின் ஒலியனுக்கு ஏற்ப உங்கள் குழந்தைகளுக்கான ஓர் இயல்பு வலுப்பெற்று வருகிறது. அதை பயன்படுத்தி முன்னேறும் வகையாக ஒரு கலையை நம் தமிழ் முன்னோர் கணியம் என்ற பெயரில் வடிவமைத்து இருந்திருக்கிறார்கள் என்று பார்த்தோம்.

எண்ணிக்கைதான் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கான அடிப்படை என்பது கணியக் கலை முன்னிறுத்தும் முதன்மையான செய்தியாகும். 

உலகில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் அனைத்தும் அடிப்படையான நேர்கள் (எலக்ட்ரான்) நிறைகளால் (புரட்டான்) ஆனவைகள்தாம். ஆனாலும் அவைகள் வெவ்வேறு தனிமங்களாக இருப்பதற்கு அவைகளில் அமைந்த நேர்கள், நிறைகளின் எண்ணிக்கை மாறுபடே காரணம் என்பதை இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிறது அல்லவா? எடுத்துக்காட்டாக இரும்பு அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 26 ஆகும். தங்கத்தின் அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 79 ஆகும்.   

அது போலவே உங்கள் அடையாளமாக இருக்கிற உங்கள் பெயரில் அமைந்த ஒலியன் எண்ணிக்கை உங்களுக்கு ஓர் இயல்பு அடையாளத்தைத் தருகிறது. 

ஐந்திர (பஞ்சபூத) ஆற்றல்களில் ஒன்றான, இயக்கம் இல்லாத வெளியாக அமைந்து- அந்த வெளியில் உலா வருகிற நிலம், நீர், காற்று, தீ என்கிற நான்கு ஆற்றல்களால், அந்த இயக்கம் இல்லா வெளி, இயக்கம் பெற்று- விண்வெளியாகி, அந்த நான்கு ஆற்றல்களுக்கு எதிர் இயக்கம் தருகிற விசும்பு என்கிற ஆற்றல் என்று தமிழ் முன்னோர் கணித்திருக்கிறார்கள்.  

தமிழ்முன்னோர் சுட்டும் ஐந்திர (பஞ்சபூத) ஆற்றல்கள:; நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பவைகள் ஆகும். இவற்றுள் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள். 

ஐந்தாவது ஆற்றலானது:- இயக்கம் இல்லாத வெளி, அந்த வெளியில் இயங்குகிற நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல்களால் இயக்கம் பெற்ற விண்வெளி, எதிர் இயக்கமாக மற்ற நான்கு ஆற்றல்களை இயக்கும் விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடையது.

இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிற நியூட்டனின் மூன்றாவது விதியில் சொல்லப்படுகிற “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு” என்பதில் அந்த எதிர்வினைதான் இந்த விசும்பு என்று நிறுவியிருக்கின்றனர் நம் தமிழ் முன்னோர்.

விசும்பைப் பேரறிவு பேரற்றல் என்கின்றனர் தமிழ் முன்னோர். நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் பதிவாகிறது. இன்றைக்கு கணினியை அவரவர்கள் தரவேற்றம் செய்த மென்பொருள் வகைக்கு இயக்கிக் கொள்ள முடிகிறது இல்லையா? ஒவ்வொருவரும் அவரவர் விதியை விசும்பு என்கிற வண்தட்டில், மென்பொருளாக எழுதிக் கொள்கின்றனர். இதைத்தான் திருக்குறள் 
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று தெரிவிக்கிறது.

ஆக உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரால் ஒவ்வொரு முறையும் அவர் அழைக்கப்படும் போதும் அவர் அந்த பெயருக்குரிய ஒலியனின் எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட இயல்புக்கு உரியவர் என்று விசும்பில் பதிவு செய்யப்படுகிறார். அவர் அவ்வாறே அவருக்கான இயல்பில் வலுப்பெற்று அந்த இயல்புக்கான துறையில் ஈடுபடும் போது சிறப்பான வெற்றியை ஈட்டுகிறார்.

இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:-
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம்
ஒலியன் 3க்கு இயல்பு குழந்தைத்தனம்
ஒலியன் 4க்கு இயல்பு பயணம்
ஒலியன் 5க்கு இயல்பு கலை
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம்
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ்
ஒலியன் 9க்கு இயல்பு போரியல் 
இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாக உங்கள் பிள்ளைகள் இயங்கும். 

ஒலியன் 1க்கு உரிய உழைப்பு இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
கண்ணகி, அமுதா, மணிமேகலை, அங்கயற்கரசி, கலைக்குறிஞ்சி, ஆகிய உழைப்பு என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். இலக்கியத் தலைவிகள் கண்ணகி, மணிமேகலை ஆகியோரின் இயல்பு உழைப்பு தானா என்று பொருத்திப் பாருங்கள்.

ஒலியன் 2க்கு உரிய நிருவாகம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அகல்யா, குமுதா, மாதவி, அகிலா, அமிர்தா ஆகிய நிருவாகம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். எம்.ஜி. இராமச்சந்திரன் நிருவாக இயல்பில் சாதித்தாரா என்று பொருத்திப் பார்க்கலாம்.

ஒலியன் 3க்கு உரிய குழந்தைத்தனம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அருள்விழி, அன்பரசி, ஆகிய குழந்தைத்தனம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம்

ஒலியன் 4க்கு உரிய பயணம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அன்னக்கிளி, அன்புக்கொடி, கனல்மொழி, கயல்விழி, தமிழ்மணி,  ஆகிய பயணம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம்

ஒலியன் 5க்கு உரிய கலை இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
சிதம்பரம், அமுதரசி, எழிலரசி, கன்னல்மொழி, கயற்கண்ணி ஆகிய கலை என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் அவர்கள் இந்த இயல்பில் பொருந்துகிறாரா என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஒலியன் 6க்கு உரிய தொழில் நுட்பம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அமுதவல்லி, அம்மு, அஞ்சு, கனியமுது, கன்னல்தமிழ், கார்குழலி  ஆகிய தொழில்நுட்பம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம்

ஒலியன் 7க்கு உரிய கமுக்கம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அண்ணாதுரை, ராமசாமி, கமல்காசன், அன்னம், கதிர், கனல், கருங்குழலி, கலைக்கடல்,  ஆகிய கமுக்கம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம்.  பேறிஞர் அண்ணாதுரை, பெரியார். ராமசாமி, நடிகர் கமல்காசன் ஆகியோரின் இயல்பு கமுக்கத்துறை (ஆன்மீகம் அல்லது நாத்திகவாதம்) என்பதும் நாமறிந்த ஒன்றுதாம்.  

ஒலியன் 8க்கு உரிய புகழ் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
திருவள்ளுவர், கருணாநிதி, அழகி, அங்கயற்கண்ணி, கன்னல், கலை, கலைத்தென்றல் ஆகிய புகழ் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். திருவள்ளுவர், கலைஞர் கருணாநிதி, செயலலிதா போன்றவர்களின் இயல்பு புகழ் தளம் சார்ந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒலியன் 9க்கு உரிய போரியல் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
பிரபாகரன், கலைக்கோவன், ஆகிய போரியல் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். மேதகு பிரபாகரன் அவர்களின் இயல்பு போரியல் என்பது உறுதியும் அறுதியும் ஆனது ஆகும் அல்லவா! 

பெயருக்கு ஒலியன் அடிப்படையில் இயல்பு கணக்கிடுவது போல, எண்களுக்கும் இயல்பை கணக்கிட முடியும் அல்லவா? கடந்த ஆங்கில ஆண்டு 2020 என்கிற போது, ஒலியன் 4க்கு உரிய பயணம்தானே கடந்த ஆண்டுக்கான இயல்பு. 

பயணம் தான்தோன்றித் தனமான இயல்பு அல்லவா? (பேருந்தின் ஓட்டுநரை நம்பியே அதில் பயணிப்பவர்கள் இருக்க வேண்டும்.) பயணம் தற்பெருமை பீற்றிக் கொள்ள பெரிதும் உதவும் அல்லவா? பயணம் சுற்றி வளைத்துச் செயல்படுவது அல்லவா? பயணம் நாடோடித்தனத்தின் இயல்பு அல்லவா? இந்த இயல்புதாம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஆட்சி செய்தது என்பதை கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒவ்வொரு நிகழ்வோடும் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

சீனாவின் தான்தோன்றித்தனத்தால் பரவிய கெரோனா, அதுவே பயணத்திற்கே முழு எதிரியாகிப் போன நிலையை கடந்த ஆண்டின் பயண இயல்போடு பொருத்திப்; பார்க்க முடியும். இந்தியாவில் நாடோடி இனத்தின் கலாச்சாரத்தை கொண்டாடுகிற பாஜக வெற்றி வாகையை கடந்த ஆண்டு சிறப்பாகச் சூடியிருந்து எதிர்ப்பில்லாமல், ஆதிக்கவாதத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்ததை பொருத்திப் பார்க்கலாம். அமெரிக்காவில் நடந்திட்ட இனவெறிக் கொலைகளைப் பொருத்திப் பார்க்கலாம். நிறைய நிறைய நீங்களே ஒப்பிட்டு பாருங்கள். கடந்த ஆண்டின் கதைத்தலைமையாக (தலைவன் அல்லது தலைவி) பயணமே அமைந்திருந்ததைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்று பிறந்திருக்கிற ஆண்டு 2021. என்கிற போது, ஒலியன் 5க்கு உரிய கலையே இந்த ஆண்டுக்கான இயல்பு. இந்த  ஆண்டின் கதைத்தலைமையாக (தலைவன் அல்லது தலைவி) கலையே அமையப் போகிறது என்பதே உண்மை.  

ஆக கலையை யெட்டியே இந்த ஆண்டு எல்லா நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படும். இயல்பாக இருப்பவர்கள் இந்த ஆண்டில் பெரிதாக சாதிக்க முடியாது என்றே கருதலாம். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் கலை இந்த ஆண்டு முதன்மையாக அமையலாம் என்று இந்த ஆண்டை நாம் விசும்பில் பதிவிடுகிறோம் என்று அறிக. இந்த ஆண்டை கலை ஆண்டு என்று எழுதிவிட்டு கலைக்கு எதிராக பேச்சை முன்னெடுக்கக் கூடாது என்று அறிக. கலைக்கு எதிராக பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு தோல்வி பரிசாகக் கிடைக்கும் என்று அறிக. ஒவ்வொரு சின்ன செயலையும் கலைப்பாங்குடன் முன்னெடுத்தால் வெற்றி நமதே என்று அறிக. 

இந்த ஆண்டை நீங்கள் வெற்றி கொள்ள, ஏதாவதொரு கலையை உங்கள் கருவியாக்கிக் கொண்டு முயல வெற்றி எளிதாகும். இந்த ஆண்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு களம் இறங்குகிறவர்கள், இதைப் புரிந்து கொண்டு சாதிக்க எனது வாழ்த்துக்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.