Show all

இன்று ஆங்கிலப் புத்தாண்டு 2021! ஆங்கில ஆண்டுக் கணக்கு, கடந்து வந்த பாதை குறித்து, ஓர் அலசல்

ஆங்கில ஆண்டுக் கணக்கு தொடர்ந்து முன்னெடுத்த பற்பல மாற்றங்கள் குறித்தது இக்கட்டுரை.  

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கில ஆண்டானது தொடக்கத்தில் பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருந்தது. அக்டோபர்- ஆக்டா- எட்டு என்பதையும், நவம்பர்- நவம்- ஒன்பது என்பதையும், டிசம்பர்- தசம்- பத்து என்பதையும் பொருத்தி ஆங்கில ஆண்டுக்கான மாதங்கள் தொடக்கத்தில் பத்து மட்டுமே என்பதை அறியலாம். 

ஜூலை மாதமும், அகஸ்டு மாதமும் பின்னர் இணைக்கப்பட்டு, ஆங்கில ஆண்டுக்கணக்கில் பனிரெண்டு மாதங்களாக்கப்பட்டு, தமிழ்த் தொடர் ஆண்டுக் கணக்கோடு நேர் செய்யப்பட்டது.

ஆனாலும் ஐரோப்பியக் நாட்காட்டிப்படி 365நாள் என்றே தொடக்கத்தில் கணிக்கப்பெற்று வந்தது. பின்பு வந்தவர்கள் இதில் ஒரு நாளில் சொற்ப பாகம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து சில திருத்தங்கள் செய்தனர். 

இந்த திருத்தத்தின் படி 400ஆண்டுகளுக்கு ஒருமுறை 3நாட்களும் சில நாழிகையும் அதிகப் பட்டு வந்தது. கிபி 1582இல் இந்த 3 நாள் மீதத்தின் வேறுபாட்டைச் சரி படுத்த எண்ணி லீப் ஆண்டுக்கணித முறையைக் கொண்டு வந்தனர்.

கிபி1600,1700,1800ஆகிய ஆண்டுகளின் கடைசி ஆண்டை சாதாரண ஆண்டாகக் கணக்கிட்டு அதில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு 29நாட்களாக மாற்றினர் இதனால் 3நாட்கள் வேறுபாட்டுக் கணக்கு சரியாயிற்று. ஆனால் நாழிகைக் கணக்கில் கொஞ்சம் மிச்சமாக வந்தது. இந்த மிச்சத்தால் 4000ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் மாறுபடும் என்று கணக்கிடப்பட்டது. கிபி1582ல் இப்படிச் செய்யப் பட்ட திருத்தத்தால் அதற்கு முன்னர் ஏற்கெனவே குறைந்து இருந்த 10நாட்களை சீர் படுத்துவதற்காக கிபி1582 அக்டோபர்4 ஆம் தேதிக்குப் பதிலாக 15ஆம் தேதியாக வைத்துக் கொள்ளப் பட்டது.

இந்தப் புதிய ஏற்பாட்டை கிபி1752ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த போது11 நாட்கள் பிந்தியிருந்தது ஆகவே அவர்கள் 1752ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதிக்குப் பதிலாக14 ஆம் தேதி என்று என்று கணக்கு வைத்துக் கொண்டார்கள். அதாவது 11தேதிகளைக் நாட்காட்டியிலிருந்து அதிகமாகக் கிழித்துக் கொண்டார்கள். இதுவே ஆங்கில ஆண்டுக் கணக்கு முறையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். கிபி 2092-ஆம் ஆண்டில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்தப் பிசுறுகள் எல்லாம் இல்லாமல் 5121 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெளிவாக கணிக்கப் பட்ட தமிழ்த் தொடர் ஆண்டு கணக்கு முறை நமக்கு உண்டு என்பது தமிழினத்திற்கான பெருமிதமாகும். தமிழ் ஆண்டுக்கணக்கில் ஒரு ஆண்டுக்கான முழு நாட்கள் 365, நாழிகை15, விநாழிகை31, தற்பரை15 (தற்பரை என்பது பரையில் ஒரு கொட்டு கொட்டும் போது எழுகின்ற அதிர்வு நேரமே தற்பரை ஆகும்) என்று நிமித்தகம், வள்ளுவம், கணியத்துறை சார்ந்தவர்களால் 5121 ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.