Show all

கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டத்தைத் தெரிவித்துள்ளார்! உலகின் முன்னணி ஆயுத வணிகரும் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் சம்சர்

100 மணி நேரத்தில் கொரோனா நுண்ணுயிரியை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வணிகரும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் சம்சர் தெரிவித்துள்ளார்.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்து வருகிறது. இந்த நுண்ணுயிரி நோயைக் குணப்படுத்த முடிந்தாலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால், கொரோனா தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. உலக நாடுகள் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் 100 மணி நேரத்துக்குள்ளாக கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக வங்காள தேசத்தைச் சேர்ந்த மூசா பின் சம்சர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கொரோனாவை ஆபத்தான ஆயுதங்களை விட பயங்கரமானதாக கருதி அதனை அழிக்க உலக விஞ்ஞானிகள் குறிப்பாக நாசாவின் பிரபல விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். இல்லையென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனித நாகரிகம் முழுவதுமாக அழிந்துவிடும்.

யுரேனியம் சாம்பலை செல்பார் சாம்பலுடன் சேர்த்து தடிமனான புகையை நாசாவால் உருவாக்க முடியும். அதில் மனித உடல்நல கேடுகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் வேறு சில கூறுகளைச் சேர்க்கலாம்.

அதன் பின்னர் அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் மூலம் அதிகபட்சமாக 10,000 அடி உயரத்தில் இருந்து இந்த புகையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.கொரோனா நோயாளிகளை எவ்வாறு குணப்படுத்தப்படுவது என்பது குறித்து உலக தலைவர்களுக்கு எதுவும் தெரியாது.

எனவே எனது ஆலோசனையை கேட்டு நடந்தால் உலக நாடுகள் அழிவில் இருந்து தப்பலாம். உங்களால் (டிரம்ப்) மட்டுமே இந்த உலகத்தையும் மனிதநேயத்தையும் காப்பாற்ற ஒரு கடவுளைப் போல செயல்பட முடியும். எனது கடிதத்துக்கு விரைவாக பதிலளிக்க கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தருணத்தில் நாம் வெடிக்கும் பட்டாசுக் கழிவுகளால் கொசு மிரண்டு ஓடும் என்று சொல்லுவோம். அனால் நாய் பூனைகள், ஆடு மாடு போன்ற விலங்குகள்தாம் மிரண்டு ஓடும். இப்போது ஆயுதவணிகர் கொரோனா மிரண்டு ஓட மருந்து சொல்கிறார். மனிதர்களை ஒட்டு மொத்தமாக முடித்துவிடும் திட்டமா என்ன? உலகம் என்ன செய்யப்போகிறதோ? பார்ப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.