Show all

ஆய்வில் ஓர் அதிர்ச்சித் தகவல்! கொரோனா எச்சரிக்கையில் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்

கொரோனா பாதித்த 2500 பேரில் 65 விழுக்காட்டு பேர்கள் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல கருத்துருக்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் சோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முதன்மையான இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்துள்ளது.

இந்த ஆய்வில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 விழுக்காட்டு பேர்கள் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட்டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த நுண்ணுயிரி எளிதாக தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ‘ஓ’ பாசிட்டிவ், ‘ஓபி’ பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ‘ஓ’ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.

‘ஓ’ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த நுண்ணுயிரி தாக்காது என்றெல்லாம் உத்தரவாதம்இல்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது. ஆனால் ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக நுண்ணுயிரித் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த நுண்ணுயிரி அதிகமாக ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான். எனவே ‘ஏ’ ரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.