முகநூலில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் உள்ள பிழையைக் கண்டுபிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் கல்லூரி மாணவர் டி.கே.கிசோரை முகநூல் நிறுவனம் பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கியுள்ளது. 18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: முகநூலில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் உள்ள பிழையைக் கண்டுபிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் கல்லூரி மாணவர் டி.கே.கிசோரை முகநூல் நிறுவனம் பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கியுள்ளது. நான் பொறியியல் இளவல் படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் கூகுள், மைக்ரோசாப்ட் தளங்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து பரிசு வாங்கினேன். தற்போது முகநூலில் ‘ரைட்ஸ் மேனஜர்’ பிரிவில் உள்ள பிழையை கண்டுபிடித்துள்ளேன். முகநூலில், ரைட்ஸ் மேனேஜர் வாய்ப்பு பொதுவாக இருக்கும். தேவைப்பட்டால் முகநூல் ஊடகத் துறையை தொடர்பு கொண்டு இதை செயலூட்டம் செய்யலாம் செயலூட்டம் செய்த பின் முகநூலில் பதிவேற்றும் காணொளி, கேளொலிகளை நாம் உரிமைப்பாடு செய்யலாம். இப்படி உரிமைப்பாடு செய்த காணொளி, கேளொலிகளை வேறு நபர்கள் தங்கள் முகநூல்; பக்கங்களில் தனிப்பு, பொது என்ற பிரிவில் பதிவேற்றுவது வழக்கம். தனிப்பு (பிரைவேட்) பிரிவில் பதிவேற்றும் போது, பதிவேற்றிய நபரின் விபரங்களை உரிமைப்பாடு பெற்ற காணொளி, கேளொலி இடுகையாளருக்கு முகநூல் காட்டியது. தனிப்பு என்பதே பதிவேற்றியவரின் விபரங்களை காட்டாமல் இருக்க தான். ஆனால், விபரங்களை காட்டுவது பிழை. ரைட்ஸ் மேனேஜரில் உள்ள இப்பிழையை கண்டுபிடித்து நீக்க வேண்டும் என முகநூல் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தேன். பிழையை சரி செய்ததுடன் என்னை பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கினர், மகிழ்ச்சியுடன் மாணவர் டி.கே.கிசோர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



