Show all

யாருக்கு வேண்டும் இந்த அழகிய கைப்பை! விலை வெறுமனே ரூ.53 கோடிதான்

போரினி மிலானேசி இத்தாலி நிறுவனம் மூன்றே கைப்பைகளை தயாரித்து நூறு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிவிடும் போலிருக்கிறதே. 

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: போரினி மிலானேசி என்கிற இத்தாலிய நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை (ஹேண்ட் பேக்) தயாரித்துள்ளது. இதன் விலை ரூ.53 கோடி. இதுபோல், 3 கைப்பைகளை மட்டும் அது தயாரித்துள்ளது. ஒவ்வொரு பையை தயாரிக்கவும் ஆயிரம் மணி நேரத்தை செலவிட வேண்டி இருந்ததாம். 

இது குறித்து இன்ஸ்டாகிராமில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்காத நெகிழிகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தில், ரூ.7 கோடியை கடல்களை தூய்மைப்படுத்த வழங்கப்படும்,’ என கூறியுள்ளார். 

இந்த பை, பளபளக்கும் முதலை தோலால் செய்யப்பட்டுள்ளது. இந்த பையில் 10 தங்க பட்டாம்பூச்சிகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டாம்பூச்சிகளில் வைரங்கள், அரிய வகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.