Show all

5123வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும்

5123வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை, உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும் மௌவல் செய்திகள் உரித்தாக்கி மகிழ்கிறது.
 
31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்பரை என்பது தமிழர் காலக் கணிப்பின் மிக நுட்பமான கால அளவாகும். ஒரு தற்பரை என்பது,  பரை என்கிற இசைக்கருவியை ஒரு கொட்டு கொட்டு போது எழுகிற அதிர்வுகளின் ஒற்றை அதிர்வு நேரமாகும். அறுபது பரை நேரத்தை ஒரு விநாழிகை என்றும் அறுபது நாழிகை நேரத்தை ஒரு நாள் என்றும் தமிழர் நாளுக்கான காலக் கணக்கை கணித்திருக்கின்றனர். 

சூரியனே பருவகாலத்தின் அடிப்படை என்றும், அதனால் ஞாயிற்றுக்கும் நமது புவிக்குமான ஒரு சுழற்சியை ஒரு ஆண்டு என்று தமிழர் கணித்தனர். 5122 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியாக ஆண்டுக்கான காலக்கணக்கை 15 தற்பரை 31 விநாழிகை 15 நாழிகை 365 நாட்கள் கணக்கிட்டனர். 

நடப்பு 5122வது தமிழ்த் தொடர் ஆண்டுக்கான ‘15 தற்பரை 31 விநாழிகை 15 நாழிகை 365 நாட்களானது’ இன்று காலை சூரிய உதயத்தில் இருந்து 49வது நாழிகை 22வது விநாழிகை 30வது தற்பரையில் (இன்று செவ்வாய்க் கிழமை இரவு மணி 1.48க்கு விடிந்தால் புதன் கிழமை) முடிகிறது. 

அதனால் அடுத்துவரும் 5123வது தமிழ்த் தொடர் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு இன்று காலை சூரிய உதயத்தில் இருந்து 49வது நாழிகை 22வது விநாழிகை 30வது தற்பரையில் (இன்று செவ்வாய்க் கிழமை இரவு மணி 1.48க்கு விடிந்தால் புதன் கிழமை) பிறக்கிறது. தமிழர் நாள் தொடக்கம் காலை ஆறு மணி என்பதால், தொடர் ஆண்டுக் கணக்கின் 5123வது தமிழ்ப் புத்தாண்டை நாளை காலை ஆறு மணிக்கு சூரிய உதயத்தில் கொண்டாடலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.