Show all

யாருடைய வேலை! பெரியார், அண்ணா, காமராசர் சலைகளுக்கு பெயர் மாற்றம்

தமிழகத்தின் புதிய ஆட்சிக்குரிய கட்சியை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தாகி விட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் அந்தத் தகவல்களை வாக்கு இயந்திரங்களுக்குள் வைத்திருக்கிறது. முடிவு வெளியாக இன்னும் பதினெட்டு நாட்கள் தமிழக மக்கள் காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் பல சாலைகளின் பெயர்கள் அவசர அவசரமாக மாற்றப்பட்டு வருகின்றன.
 
01,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தின்  புதிய ஆட்சிக்குரிய கட்சியை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தாகி விட்டது. ஆனாலும் தேர்தல் ஆணையம் அந்தத் தகவல்களை வாக்கு இயந்திரங்களுக்குள் வைத்திருக்கிறது. முடிவு வெளியாக இன்னும் பதினெட்டு நாட்கள் தமிழக மக்கள் காத்திருக்க வேண்டும். 

அதற்குள் பல குளறுபடிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இருவர் ஸ்கூட்டியில் வாக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்று பரபரப்பு கிளப்புகின்றார்கள். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிக்கு நள்ளிரவில் ஐயத்திற்கு இடமாக கழிப்பக வண்டி கொண்டு வந்து நிறுத்துப்படுகிறது. இதுபோக தற்போது பல சாலைகளின் பெயர்கள் அவசர அவசரமாக மாற்றப்பட்டு வருகின்றன.

மற்றொரு பக்கம் ‘தமிழ்நாடு’ என்ற பெயரையும் ‘தஷின பாரத்’ என்று மாற்றப்போகிறார்கள் என்று இணையத்தில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதிகாரப்பாடான ஆட்சி அமைய இன்னும் பதினெட்டு நாட்கள் இருக்கின்ற நிலையில் யார் இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்? தமிழகமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி நிற்கின்றனர்.

சென்னையில் பெரியார் ஈ.வே.ரா சாலையை தொடர்ந்து தற்போது அண்ணா, காமராசர் சாலைகளின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு பாஜக, அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளும், தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கி.மீ. நீளமுள்ள தலைமைச் சாலை பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பெரியார் ஈ.வே.ரா சாலையைக் கரேன்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக கரேன்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 

இந்த நிலையில் சென்னையில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் இருந்த சாலைகளின் பெயரை மாற்றி தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.