Show all

ஐந்து மாதங்களில் ஐந்தாவது இதழியலாளர் கொலை! ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தான் நடுமாநிலமான கோரில் இதழியலாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐந்து மாதத்தில் இவரோடு ஐந்து இதழியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆப்கானிஸ்தான் நடுமாநிலமான கோரில் இதழியலாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிஸ்மில்லா ஐமக் ஒரு உள்ளூர் வானொலி நிலையத்தின் ஆசிரியராக இருந்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த ஐந்து மாதங்களில் இவரையும் சேர்த்து ஐந்து இதழியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன் நடந்த ஒரு கொலை முயற்சியிலிருந்து ஐமக் தப்பியதாக ‘அறிக்கைடர்ஸ் வித் அவுட் பார்டர்’ என்கிற அமைப்பு கூறியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளுக்காகப் கருத்துப்பரப்புதல் செய்பவர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட பல கொலைப் பாதகங்களுக்கு, எந்த ஆயுதமேந்திய குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், இப்படிப்பட்ட கொலைகளில் பெரும்பாலானவற்றுக்கு தாலிபன்தான் பொறுப்பு என்கின்றனர்.

இதழியலாளர்கள் கொல்லப்படுவதை ஐ.நாஅவை, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகள் கண்டித்துள்ளன. ஆப்கானிஸ்தான் அரசுக்கும், அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையில், அடுத்த கிழமை மீண்டும் ஒரு கலந்துரையாடல் தொடங்க இருக்கிறது. இந்த இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதும், வன்முறை தொடர்கிறது.

கஜினி இதழியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஹ்மதுல்லா நெக்சாத் கடந்த மாதம் கிழக்கு நகர்புறத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இனிகாஸ் தொலைக்காட்சி ரூ வானொலியில் பணியாற்றி வந்த இதழியலாளர் மலாலா மைவான்ட், சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத ஆட்;களால், அவர் பணிக்குச் செல்லும் போது தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம், பிரபலமான யாமா சியாவஷ் என்கிற தொலைக்காட்சிப் இதழியலாளர், காபூல் நகரத்தில் அவரது வீட்டருகில், அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த வெடி குண்டால் கொல்லப்பட்டார்.

வானொலி லிபர்டி என்கிற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அலியாஸ் தயி என்கிற இதழியலாளர் கார் வெடி குண்டால் லஷ்கர் கா எனும் பகுதியில், கடந்த நவம்பர் மாதம் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் இயக்குநர்களில் ஒருவரான சபா சகர் காபூல் நகரத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்த தாக்குதலில் இருந்து அவர் தப்பித்தது நினைவுகூரத்தக்கது.

பாகிஸ்தான், வங்காளதேசத்தோடு இந்த ஆப்கானித்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து- ஐந்து ஆண்டுக்கு முன்பு வரை  இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய மதச்சிறுபான்மையோரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு- இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து சலுகை அளித்தது அல்லவா?

வட இந்தியர்களின் தொப்புள் கொடி உறவுகள் அதிகம் வாழும், மற்றும் ஆரியர்களின் சொந்த மண்ணும் ஆகிய அந்த ஆப்கானிஸ்தான், இந்த ஆப்கானிஸ்தான். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.